கோவில்களில் முறைகேடா? புகார் அளிக்கலாம்
சென்னை: 'அறநிலையத்துறை கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக புகார் அனுப்பலாம்' என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுதும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடக்கும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், கோவில் பணிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கு லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான புகார்களை, எனக்கு நேரடியாக தெரிவிக்கலாம்.
தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளிக்க வேண்டும். நானும், எனது அலுவலகமும் நேரடியாக, இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம். புகார்களை, ministerhrce@tn.gov.in என்ற 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement