வடமாநிலத்தவரிடம் பணம் பறித்த மேலும் 3 பேர் கைது

குமாரபாளையம்:மேற்குவங்கத்தை சேர்ந்த, 7 பேர் வேலை தேடி நாமக்கல்லுக்கு வந்தனர். அவர்களிடம், கடந்த, 18ல், ஏழு பேர் கொண்ட கும்பல் ஏமாற்றி, 75,000 ரூபாயை பறித்துக்கொண்டனர்.

இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தேவனாங்குறிச்சியை சேர்ந்த சுரேஷ், 32, ராஜதுரை, 29, திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கோபிநாத், 19, தங்கமணி, 32, ராஜ்குமார், 33, மற்றும் மூவர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் ஏற்கனவே ஐந்து பேரை கைது செய்த நிலையில், நேற்று தேவனாங்குறிச்சியை சேர்ந்த சோமசுந்தரம், 35, திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜீத், 32, செங்கோடம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரமோகன், 50, ஆகிய மூவரை கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.

Advertisement