சர்வீஸ் ரோடு பணி துவங்காததால் அவதி

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி – கோவை ரோட்டில், முள்ளுப்பாடி, கிணத்துக்கடவில் உள்ள மேம்பாலங்களில் ஓடுதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் ரோடுகளை புதுப்பிக்க, பழைய தார் ரோடு சுரண்டப்பட்டுள்ளது.

ஆனால், கிணத்துக்கடவு மற்றும் தாமரைக்குளம் பகுதிகளில் சர்வீஸ் ரோடு சுரண்டப்பட்டு ஒன்றரை மாதங்களாகியும், சீரமைப்பு பணிகள் துவங்காததால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ரோடு சீரமைப்பு பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடக்கிறது. இதில், மேம்பாலம் மட்டும் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சர்வீஸ் ரோடு பணிகள் தாமதமானது. மழை பொழிவு குறைந்ததும், சர்வீஸ் ரோடு பணிகள் துவங்கப்படும்,’ என்றார்.

Advertisement