ஒரே நாளில் ரூ.12 லட்சம் அபராதம் வசூல்

அண்ணா நகர்: அண்ணாநகர் மண்டலம், வார்டு 108ல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அடுக்குமாடி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனம், துாய்மை மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறியதாக, மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு மட்டும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ஒரே தவணையில் வசூலித்தனர். அதேபோல் விதிமீறல் நடந்த இடங்களில், 12.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Advertisement