மகனை கொன்று நாடகமாடிய தாய், கள்ளக்காதலனுடன் கைது

மயிலாடுதுறை: : மயிலாடுதுறை மாவட்டம், ஆளவேலியை சேர்ந்தவர் கனிவண்ணன், 31. இவரது மனைவி கவிப்ரியா, 26. தம்பதிக்கு, 3 வயதில் இளன் உட்பட இரு ஆண் குழந்தைகள் இருந்தனர்.

சீர்காழி தனியார் வங்கி ஊழியர் அபினேஷுடன், 30, கவிப்ரியாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கண்டித்த கனிவண்ணனை பிரிந்து, இரு குழந்தைகளுடன் ஆக்கூரில் கவிப்ரியா வசித்தார்.

ஜூன், 25ல், இளன், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்தது.

செம்பனார்கோவில் போலீசார் விசாரித்தனர்.

அதில், கவிப்ரியாவை சந்திக்க வந்த அபினேஷ், இளனை சுவரில் மோதியதில், காயமடைந்தது தெரிந்தது. கவிப்பிரியா, அபினேஷை போலீசார் கைது செய்தனர்.

Advertisement