தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வழக்கு; ஆஜராகாத செந்தில் பாலாஜி

35


சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய வழக்கு தொடர்பாக, முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரரும் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக, தவெ எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசியதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரையில் பேரம் பேசியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர் விசாரணையில், தவெக ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. செந்தில்பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அளித்திருந்தனர்.

இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்கும் ஆஜராகவில்லை.


பிரத்யேக வீடியோ!

டிமிக்கி கொடுத்த செந்தில்பாலாஜி; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement