இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு 6 நாள் பயணம்; பிரதமர் மோடி இணையத்தில் பதிவு
புதுடில்லி: இந்தோனேசியா,ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 6 நாள் பயணமாக புறப்பட்டு சென்றார்.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரை பயணம் மேற்கொண்டு உள்ளார்.
புதுடில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அவர் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பேச்சு நடத்த உள்ளார். இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்குப் புறப்பட்டு சென்றார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அடுத்த சில நாட்களில், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவுள்ளேன். இருநாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்துவதும், வருங்காலத்தில் நமது நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த பயணத்தின் நோக்கமாகும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சிறப்பு வீடியோ!
3 நாடுகளில் சுற்றுப்பயணத்தை துவங்கினார் பிரதமர் மோடி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மூன்று நாடுகளும் உயரிய விருது தர ஒத்துக் கொண்டார்களா
பிரதமர் மோடி ஜகார்த்தாவுக்கு மேற்கொள்ளும் இந்த பயணம் ஸடாலின் மேற்கொண்டது போல் ஒரு இன்பச் சுற்றுலா பயணம் அல்ல! இது இந்தியாவின் இந்தோ பசிபிக் வியூகத்தைக் கட்டமைப்பதில் அடுத்தகட்டமாகும். இந்த நிகழ்ச்சி நிரல் மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது. கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, முக்கிய கனிம விநியோகச் சங்கிலிகள். உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளை ஒட்டியுள்ள அந்தமான் கடலில் இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒரு கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல்சார் கள விழிப்புணர்வு, கடற்படை ஒருங்கிணைப்பு, மலாக்கா, சுண்டா மற்றும் லோம்போக் நீரிணைகளின் பாதுகாப்பு, பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டம் ஒரு முக்கிய உத்திசார் விவாதமாகத் தொடர்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதோடு, பிராந்தியத் தடுப்பாற்றலையும் வலுப்படுத்துகிறது. இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய நிக்கல் இருப்பைக் கொண்டுள்ளது இது மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் ஆற்றல் சேமிப்பிற்கு ஒரு முக்கிய வளமாகும். ஜகார்த்தாவின் கீழ்நிலைச் செயலாக்கக் கொள்கையை எதிர்ப்பதற்குப் பதிலாக, இந்திய நிறுவனங்கள் இந்தோனேசியாவின் மதிப்புச் சங்கிலிக்குள் முதலீடு செய்து, நீண்டகால விநியோகத்தைப் பாதுகாக்க உதவுவதோடு, இந்தியாவின் உற்பத்தி இலக்குகளுக்கும் ஆதரவளிக்கின்றன.
காசுக்காக வாயையும், அறிவையும் விற்கும் பொய் கருத்திடும் அப்பாவிகளை என்னவென்று அழைக்கலாம்.
மூணு மெடல் லட்சியம் ஒண்னு நிச்சயம்..
இன்னும் வீட்ல ஓசி சோறு போடுகிறார்கள்...விரட்டி அடித்தால் தெரியும்மேலும்
-
கோடம்பாக்கம், வியாசர்பாடி ஐவர் கால்பந்தில் ‘சாம்பியன்’
-
மாநில யு - 16 கிரிக்கெட் திருவள்ளூர் அணி வெற்றி
-
ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி
-
ஊத்துக்காடு பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
-
வெளியே தலைகாட்ட மறந்த 'மாஜி'க்கள் கடும் விரக்தியில் அதிமுக - திமுக
-
இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் :ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழக்கம்