பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள்; உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட், இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பட்ஜெட் விவாதம் முடிந்ததும், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இதற்காக, துறை வாரியாக, முதல்வர் விஜய் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். காலை மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளைகளாக, இந்த ஆய்வு கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இதுவரை, கூட்டுறவு, உணவு, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ச்சியாக, 22ம் தேதி வரை ஆய்வு கூட்டங்களில், முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு குறுகிய கால அவகாசமே உள்ளது. எனவே, ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் துறை செயலர்கள், அடுத்த இரண்டு நாட்களில், புதிய திட்டங்கள் குறித்த அறிக்கையை தயாரித்து, நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2500 குறித்து அறிவிப்புகள் இடம் பெறுமா
இது இலவசமாக கொடுக்கப்படும் காசு தானே. ஓர் நாலரை வருஷம் அவகாசம் கொடுக்க வேணும். த்ரவிஷன்களால் தமிழகம் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு போய் விட்டது என்பது மக்களுக்கு தெரியும். ரயிலு குடும்பத்திடம் 13.5 லட்சம் கோடி ஊழல் பணம் மற்றும் 2ஜியில் அடித்த 1.76 லட்சம் கோடி கனி+ராசாவிடம் உள்ளது. எடப்பாடி மற்றும் சசிகலா விடம் அதே அளவு ஊழல் பணம் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை இசுரேலின் மொசாட் வந்தால் இவர்களிடம் சுரண்டி எடுக்க முடியும். அதுவரை மக்கள் அமைதி காக்க வேண்டும்மேலும்
-
கோடம்பாக்கம், வியாசர்பாடி ஐவர் கால்பந்தில் ‘சாம்பியன்’
-
மாநில யு - 16 கிரிக்கெட் திருவள்ளூர் அணி வெற்றி
-
ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி
-
ஊத்துக்காடு பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கலெக்டரிடம் மனு
-
வெளியே தலைகாட்ட மறந்த 'மாஜி'க்கள் கடும் விரக்தியில் அதிமுக - திமுக
-
இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் :ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முழக்கம்