நுாலகத்திற்கு 2,000 புத்தகங்கள் வழங்கல்

தமிழக அரசு சார்பில், கண்ணகி நகரில் 4 கோடி ரூபாயில் கட்டிய 'ஏசி' நுாலகம், கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது. இந்த நுாலகத்திற்கு, முதல் தலைமுறை கற்றல் மையம் சார்பில், 2,000 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இங்கு மாலை நேர சிறப்பு வகுப்பில் பயிலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவ - மாணவியர் நலனுக்காக, சிற்றுண்டி வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது.

Advertisement