விழிஞ்ஞம் துறைமுக பங்கு விற்பனை; பினராயி எதிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை, சர்வதேச கப்பல் நிறுவனமான 'மெடிட்டரேனி யன் ஷிப்பிங்' நிறுவனத்துக்கு விற்க, அதானி போர்ட்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு எதிராக கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், செபிக்கு எழுதியுள்ள கடிதம்:

ஒப்பந்தப்படி, துறைமுக நிறுவனத்தின் பங்குகளில் 25 சதவீதத்துக்கு மேல் மாற்றம் செய்ய வேண்டுமானால், மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், 49 சதவீத பங்கு விற்பனை தொடர்பாக கேரள அரசிடம் அதானி நிறுவனம் அனுமதி பெறவில்லை. மேலும், அரசுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.

Advertisement