அத்துமீறி வீடு புகுந்த நபர் போலீசில் பெண் புகார்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே இளம்பெண் வீட்டில் வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனுார், புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வினிதா, 30; இவர் கடந்த 5ம் தேதி இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தனது குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த அரிகோவிந்தன், 35; என்பவர் வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார்.

சத்தம் கேட்டு ஏழுமலை எழுந்து பார்த்ததும் தப்பிச் சென்ற அரிகோவிந்தன் அனைவரையும் உள்ளே வைத்து கதவை பூட்டி சென்றுள்ளார்.

இதுகுறித்து வினிதா அளித்த புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement