இந்தியா - ஆஸி., கூட்டுச்செயல்பாடு டெஸ்ட் போட்டி; முடிவுகள் டி20; கிரிக்கெட் மொழியில் விளாசிய மோடி!
மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவு மற்றும் செயல்பாட்டை கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இரு நாட்டு தொழில் துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் விரிவடைந்து வரும் புதிய கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. உற்பத்தி, எரிசக்தி, உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, விமான போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, உணவு பதப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் உள்ள நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகளை ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது இரு நாடுகளின் பலமே, மக்கள் இடையிலான உறவுகள் தான். இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகின்றனர். இந்திய மாணவர்கள் கல்வி கற்க விரும்பும் நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய பல்கலைகளின் வளாகங்கள் இந்தியாவில் தொடங்கப்படுவது நமது கூட்டுச் செயல்பாட்டில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயர்கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்பு, எதிர்கால உலகளாவிய வாய்ப்புகளுக்கு இரு நாடுகளின் திறமையாளர்களை ஊக்குவிக்கும்.
கிரிக்கெட் தான் இந்தியா -ஆஸ்திரேலியா ராஜதந்திர உறவின் மொழியாக இருக்கிறது. நம் உறவின் நோக்கங்கள், ஒரு நாள் போட்டியை போன்றவை. முடிவுகள் அனைத்தும் டி20 போட்டிகளை போல வேகமானவை. நமது கூட்டுச் செயல்பாடு, டெஸ்ட் போட்டிகளை போல ஆழமானது, நீளமானது.
வரும் ஆண்டுகளில், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் போன்ற முக்கிய விளையாட்டு போட்டிகள் இரு நாடுகளிலும் நடைபெற உள்ளன. இதன் மூலம், நமது விளையாட்டு ஒத்துழைப்பு அதிகரிக்கும். மேலும் விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கான பல வாய்ப்புகளும் உருவாகும், என்று கூறினார்.
ஒன்றும் ஒன்றும் பதினொன்று!
இந்திய - ஆஸி., கூட்டுக்கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், இரு நாடுகளின் ஒத்துழைப்பை குறிப்பிட்டு, ''ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டாக மாறி பலமாகி விடும்,'' என்றார். அதற்கு பிரதமர் மோடி, ''ஒன்றும், ஒன்றும் அருகருகே நின்றால், பதினொன்று ஆகி விடும்,'' என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
அஞ்சு நாள் போட்டியா? எவன் பாக்குறான்?
அப்பாவிகளுக்கு அறிவாலயப் பொட்டலத்தைத் தவிர வேறு ஒன்றும் புரியும் அளவிற்கு மேல் மாடியில் ஒருவரும் இல்லை அப்பனே அஞ்சு நாள் போட்டியை அப்பாவிகளைத் தவிர எல்லாரும்தான் பார்க்கிறார்கள்
டி 20 போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்றுள்ளது அப்போ.... கோவிந்தா கோவிந்தாவா
இந்தியாவின் சிறந்த ராஜதந்திரி
11 என்று மோடிஜி குறிப்பிட்டது கிரிக்கெட் அணியில் உள்ள 11 வீரர்களையா?
இரண்டு நாடுகளுக்கு இடையே கூட்டு செயல்பாடு அரசியல் சம்பந்தப்பட்டது. படிப்பதற்கு மாணவர்கள் வெளிநாடு சென்று அங்கேயே தங்கி வேலை தேடிக்கொள்கின்றனர். வாழ்க்கை துணையும் இரு பாலரும் தேடிக்கொள்கின்றனர். இதில் அதிசயம் எது ஏன்றால் வயதான தாய் தந்தையரைதவிர எல்லோரும் சென்று விடுகின்றனர். . இதுபோல் வெளிநாட்டினர் நம் நாட்டில் நிரந்தரமாய் ஏன் தங்குவதில்லை.? காரணம் வெளிநாடு சென்ற நம் மாணவர்கள் மனசில் தாய்நாடு என்பது வாழ்க்கை வளம் கொடுத்த நாடுதான். இதனையும் மறைக்க கூடாது வட மாநிலத்தவர் குறைந்த அளவு செல்கின்றனர். ean?
நம்மூர் மருத்துவ பட்டங்கள் அங்கே அங்கீகரிக்கப்படவில்லை,மேற்கெதிய பட்டங்கள் மட்டுமே ஆஸ்திரேலியா வில் அங்கீகரிக்க பட்டிருக்கிறது அதை போன்றவை எதாவது செய்தால் மக்களுக்கு நல்லது அதை விடுத்தது
அவரே இந்த மாத டூர் பேக்கேஜ் சுற்றுலாவில் உள்ளார் அவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? அயல் நாட்டு பிரதமர் அவ்வப்போது இந்தியா வந்து ஓய்வெடுத்துவிட்டு மான் கீ பாத்தில் ஏதாவது அறிவுரை சொல்லிவிட்டு சென்று விடுவார்
ஐயா ரகு..உங்களை பெத்தவங்க நல்ல வளர்த்து இருக்காங்க..
ரகு வின்சி - - வந்து - - ராவுல் வின்சி மாதிரி வெளிநாட்டு விஜ்ஜ்ஜ்ஜ்ஜாயம் செய்வதற்கு யாராலும் முடியாது போன இடத்தில் எல்லாம் நம் பாரத நாட்டைத் தூற்றி வசை பாடும் அந்த இத்தாலிக் கலப்படக் களவாணி ரொட்டி தாசனுக எல்லாம் இவரைக் கண்டாலும் கேட்டாலும் வயைறறு எரிச்சலால் வெந்து சாகிறார்கள்மேலும்
-
மாநகராட்சி முறையாக திட்டமிடாததால் ரூ.31 கோடி வீணடிப்பு! கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கத்தில் குழப்பம்
-
தேர்தலின் போது ஐ.டி., பிரிவு சரியாக செயல்படவில்லை: அதிமுக நிர்வாகிகளிடம் பழனிசாமி ஆவேசம்
-
த.வெ.க.,வுடன் தொடர்ந்து பயணிப்போம்: அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்
-
கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவுக்கு திமுக கடிதம்
-
ஊழலை ஒழித்ததே முதல்வரின் சாதனை: மதிமுக வைகோ பாராட்டு
-
காங்., அமைச்சர்கள் காவிரி நீர் பெற்று தர வேண்டும்