கொத்தனார் தற்கொலை

வானுார்: கிளியனுார் அருகே வயிற்று வலியால் மதுவில் விஷம் கலந்து குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

கிளியனுார் அடுத்த வில்வநத்தம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 55; இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 6ம் தேதி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த அவர், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement