ஆர்டரால் உருவானது பேஜார்பேரூர்: பேரூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 27; கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு, சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு பேரூரை சேர்ந்த கார்த்திக், 27, மதிவாணன், 29, குமார், 33 ஆகிய மூவரும

ஆர்டரால் உருவானது பேஜார்



பேரூர்: பேரூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 27; கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு, சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு பேரூரை சேர்ந்த கார்த்திக், 27, மதிவாணன், 29, குமார், 33 ஆகிய மூவரும், கோகுலகிருஷ்ணனை சப்ளையர் என நினைத்து உணவு ஆர்டர் செய்துள்ளனர். தான் சப்ளையர் அல்ல என கோகுலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோகுலகிருஷ்ணன் தலையில் பாட்டிலால் தாக்கப்பட்டார். பேரூர் போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர். கோகுலகிருஷ்ணன் சிகிச்சை பெறுகிறார்.

Advertisement