முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
நத்தம்,ஜூலை 11-நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில், நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோமாலியாவில் சிக்கி தவித்த மீனவர்கள் ஊர் திரும்பினர்
-
மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
-
விதிகளைத் தளர்த்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
-
வரதட்சணை புகாரில் சமரசம்; இன்ஸ்.,- எஸ்.ஐ.,க்கு அபராதம்
-
சிறுமி கூட்டு பலாத்காரம்; இருவருக்கு 'போக்சோ'
-
சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவு
Advertisement
Advertisement