இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் * ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
ஆர்டோஸ்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் நேற்று இந்தியாவுக்கு மூன்று வெண்கலப் பதக்கம் கிடைத்தன.
சீனாவில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் முதல் சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 800 மீ., ஓட்டம் நடந்தது.
இந்தியாவின் புமேஷ்வொரி தேவி, 2 நிமிடம், 10.20 வினாடி நேரத்தில் வந்து வெண்கலம் பதக்கம் கைப்பற்றினார். உஸ்பெகிஸ்தானின் ஜோன்பிபி (2:08.41), ஜப்பானின் குருமி (2:09.42) தங்கம், வெள்ளி வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷ்ணவி (2:10.83) 5வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஷகீல், (1 நிமிடம், 48.78 வினாடி) வெண்கலப் பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அபே சிங் (20.96 வினாடி) வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா, 1 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என 9 பதக்கம் வென்றுள்ளது.
வாசகர் கருத்து (1)
VENUGOPAL RASAIYA - ,இந்தியா
11 ஜூலை,2026 - 18:57 Report Abuse
வாழ்த்துகள் 0
0
Reply
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்
Advertisement
Advertisement