அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!

18



நமது நிருபர்




அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வெவ்வேறு கண்காணிப்பு குழுக்களில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி, மைக்ரோசாப்ட் செயல் துணைத்தலைவர் ஆஷா சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜன், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மத்திய வங்கியின் நிதிக் கொள்கையை நவீனப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஐந்து முக்கிய நிபுணர் குழுக்களில் ஒரு குழுவில் இவர் உறுப்பினராகச் செயல்படுவார்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் கெவின் வார்ஷ் தலைமையிலான இந்த குழு, வங்கியின் சொத்து இருப்பு, நிதிக் கொள்கைகளைச் செயல்படுத்துதல் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும். அதேபோல் வெவ்வேறு கண்காணிப்பு குழுக்களில் பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி, மைக்ரோசாப்ட் செயல் துணைத்தலைவர் ஆஷா சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுக்களில் மூன்று இந்திய வம்சாவளி நிபுணர்கள் இடம்பெற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பணிக்குழுக்களில் நோபல் பரிசு பெற்ற தாமஸ் சார்ஜென்ட், வால்மார்ட் முன்னாள் சிஇஓ டக் மெக்மில்லன் ஆகியோரும் இடம்பெற்று இருக்கின்றனர்.

Advertisement