கர்ப்பிணி பெண்களின் விபரம் முறையாக பராமரிக்க அறிவுரை

சேந்தமங்கலம்:கொல்லிமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் மதுபாலன் ஆய்வு செய்தார்.


இதில், பவர்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேனுார்பட்டி, திருப்புளிநாடு, வாழவந்திநாடு, சோளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடி பணியாளர்களிடம் மையத்திற்கு வரும் குழந்தைகளின் எடை, உயரம், கர்ப்பிணி பெண்களின் விபரம் முறையாக கணக்கெடுத்து பராமரிக்கும்படி அறிவுறுத்தினார்.தொடர்ந்து, செங்கரை, எடப்புளி நாடு அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியில், சமையலறை மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டு, மாணவ, மாணவியரின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். மேலும், கொல்லிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அரியூர்நாடு காப்புக்காடு இரவு வான்வெளி பூங்காவை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
திண்ணனுார் நாடு தாவரவியல் பூங்காவின் செயல்பாடுகள், சோளக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கத்தில் பால் தர பரிசோதனை கருவி, பால் கேன் குளிர்விப்பான் ஆகியவற்றை பார்வையிட்டு, கலெக்டர் மதுபாலன் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement