சசங்கமித்ரா மருத்துவமனை  3ம் ஆண்டு துவக்க விழா 

கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் நுரையீரல் மற்றும் ரத்தக் குழாய் சிகிச்சை மையமான சங்கமித்ரா மருத்துவமனை, 3 ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. 

மருத்துவமனை நிர்வாக இயக்குநர் லாவண்யா இளமாறன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றினார். மருத்துவமனை இயக்குநர் இளமாறன், இனிப்பு வழங்கினார். 

விழாவில், டாக்டர் ஸ்ரீதரன், பாலாஜி லேப் ராமலிங்கம், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் இளமாறன் கூறுகையில், ‘கடலுார், விழுப்புரம், புதுச்சேரியிலேயே சங்கமித்ரா மருத்துவமனையில் தான் முதல் முறையாக அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம் துவங்கப்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பாகவும், விரைவில் குணமடையும் விதத்தில் ரத்த நாள அறுவை சிகிச்சை, ரத்த குழாய் அடைப்பு, திறந்த ஆஞ்சியோ முறைகள், லேப்ராஸ்கோபி, நுரையீரல் அறுவை சிகிச்சை, மூச்சு குழாய், லேசர் மற்றும் அதிநவீன முறையில் வெரிகோஸ் வெயின் அறுவை சிகிச்சை, நீரிழிவு  காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர். 

Advertisement