பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்
சென்னை: பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88.
ஆந்திராவின், குண்டூர் மாவட்டத்தின் ரிபேலே பகுதியில் 1938 ம் ஆண்டுஏப்.,23ம் தேதி பிறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஒடியா, துலு, பஞ்சாபி, வங்காளம் , கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரம்பாடல்களை பாடி உள்ளார்.










கடந்த சில நாட்களாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று( ஜூலை 11) அவர் காலமானார்.
@block_Y@
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் இறுதிச் சடங்கு, மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள கனியனஹண்டி கிராமத்தில் அமைந்துள்ள அவரது சொந்தப் பண்ணையில், முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும். முன்னதாக அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்படுகிறது.
block_Y
@block_G@
லண்டன் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: எஸ்.ஜானகி இறைவனடி சேர்ந்துவிட்டார்.அவர் உழைப்பு அதிகம். என்னுடைய 50 ஆண்டு இசை பயணத்தில் அவரோடு நிறைய பாடல்களில் பணியாற்றி இருக்கிறேன். அவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துங்கள். இவ்வாறு இளையராஜா பேசினார்.
block_G
@block_P@
மூத்த பாடகி பி சுசீலா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "என் வாழ்வில் மிக துயரமான நாள். இசைத்துறையில் ஒரு புகழ்பெற்ற சக கலைஞர் என்பதைத் தாண்டி, என்னுடைய உண்மையான தோழியையும், சகோதரியுமான எஸ். ஜானகியை இழந்துவிட்டேன்.
இசைத்துறையில் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களை (50 ஆண்டுகள்) ஒன்றாக கழித்த நாங்கள், பல மொழிகளில் எண்ணற்ற மெல்லிசைப் பாடல்களையும், அழகான, வாழ்நாள் முழுவதுமான ஒரு பந்தத்தையும் பகிர்ந்து கொண்டோம்.
அவருடைய பிரிவு இசை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. என் அன்பிற்குரிய ஜானகி, நீ லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வாய்" என தெரிவித்துள்ளார்.
block_P
@quote@தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் என பிரபலங்கள் அடுத்தடுத்து காலமானார்கள். நேற்று முன்தினம் ஒளிப்பதிவாளர், இயக்குனர் செழியன் காலமானார். தற்போது ஜானகி காலமாகியுள்ளார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
quote
அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்க்கை வரலாறு
இயற்பெயர் : எஸ் ஜானகி
பிறப்பு : 23-ஏப்ரல்-1938
பிறந்த இடம் : குண்டூர் , ஆந்திரா
பெற்றோர் : ராமமூர்த்தி - சத்யவதி
சினிமா அனுபவம் : 1957-2017
கணவர் : ராம்பிரசாத் (இறப்பு)
வாரிசு : முரளிகிருஷ்ணா (இறப்பு)
பட்டம் : நைட்டிங்கேள் ஆப் சவுத் இண்டியா
இறப்பு : 11-ஜூலை-2026
விருது
1. 1977ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது'; '16 வயதினிலே' திரைப்படத்தில் 'செந்தூர பூவே' பாடல்
2. 1981ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது'; 'ஒப்போல்' என்ற மலையாளப் பாடல்
3. 1984ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது' ;'சித்தாரா' என்ற தெலுங்கு படத்தில் பாடியதற்காக
4.1992ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது'; 'தேவர் மகன்' திரைப்படத்தில் 'இஞ்சி இடுப்பழகா' பாடல்
5. சிறந்த பின்னணி பாடகிக்கான 'தமிழ் நாடு அரசு விருது' 6 முறை வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
6. சிறந்த பின்னணி பாடகிக்கான ஆந்திர அரசு விருதான 'நந்தி விருது' 10 முறை வழங்கப்பட்டது
7. சிறந்த பின்னணி பாடகிக்கான 'கேரள மாநில சினிமா விருது' 11 முறை வழங்கப்பட்டது
8. தமிழக அரசால் 'கலைமாமணி விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
9.1986ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'பிலிம் பேர் விருது' 'சாஹேப்' என்ற ஹிந்தி படத்திற்காக
10. மைசூர் பல்கலை கழகத்தால் 'கவுரவ டாக்டர் பட்டம்'
11. 2013ல் இந்திய அரசு 'பத்ம பூஷன்' விருது அறிவித்தது. ஆனால் இதனை நிராகரித்தார்.
சிங்கார வேலனே வா
-ஜல் ஜல் சலங்கை ஒலி
-தூக்கம் உன் கண்களை
-சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
-உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
-அன்னக்கிளி உன்னை தேடுதே
-ஓ எந்தன் வாழ்விலே
-மாதா உன் கோவிலேலே
-அழகிய கண்ணே
-நாதம் என் ஜீவனே
-நெஞ்சினிலே நெஞ்சினிலே...
என
பல பல தருணங்களில்
என்னை
தாலாட்டிய பூங்காற்றே
உங்களை
நன்றியோடு வழியனுப்புகிறேன்!
இவருக்கு அரசு சார்பில் மரியாதை கிடைக்குமா?இதுக்கு கர்நாடக தான் முடிவு செய்யனும்?
முக்கல் முனகல் பாட்டுக்களைப் பாடிய கலாச்சாரத்தைத் துவக்கியவர் ....
இனி இப்படி ஒரு குரலை கேட்க முடியுமா என்றால் அது நடவாது. ஜானகியம்மாவை போல பாடலாம் ஆனால் என்றைக்குமே ஒரிஜினல் போன்று வருமா என்றால் இல்லை... அதுதான் மிகப்பெரிய இழப்பு. எவ்வளவோ பாடல்களால் மனம் அமைதிகொள்ளும் அளவுக்கு அருமையான பாடல்களை பாடிய ஜானகியம்மா அவர்களின் ஆன்மா இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாற வேண்டுகின்றேன். ஓம் நமசிவாய.
Qatar Fomer King passed away 12 July 2026
நிலவு நிலையாக தூங்க சென்றுவிட்டதே,குயில் கூவுவதை விட்டு விட்டு உயர சென்றுவிட்டதை மனம் ஏற்கமறுக்கிறது .இறைவன் இடம் கொடுக்கட்டும் .
நம்மையெல்லாம் மகிழ்வித்த, தனித்திறன் கொண்ட, மரியாதைக்குரிய நமது அம்மா ஜானகி அவர்கள் நம்மிடையே இல்லை என்பது கேட்டு, கண்கள் தாரைதாரையாய் கண்ணீர் விட்டு நிற்க மறுக்கிறது. பாடும் நிலா பாலு அவர்களுக்கு பிறகு இவரது மறைவு. கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா?
ஓம் ஷாந்தி
எம் இதயங்களில் என்றும் ஒலிக்கும் குரல்...
இசை உலகின் அரிய ரத்தினம், தமிழ் சினிமாவின் இனிய குரல்,
பாடகி ஸ்ரீ எஸ். ஜானகி அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.
அவரது மெல்லிய, உணர்ச்சி நிறைந்த குரல் தலைமுறைகளைத் தாண்டி
இதயங்களைத் தொட்டு, இன்னும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
“தூரத்தில் நான் கண்ட முகம்” என்ற அந்த அழகிய பாடலில்,
நிழல்கள் திரைப்படத்தில் தன் இனிய குரலால் நம்மை மயக்கியவர்.
ஆயிரக்கணக்கான பாடல்களில் பக்தியும், காதலும், வேதனையும்,
மகிழ்ச்சியும் பொழிந்த அவரது குரல், தமிழ் இசையின் அழியா பொக்கிஷம்.
அவரது பாடல்கள் வழியே வாழ்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களின்
நெஞ்சங்களில் அவர் என்றும் நிலைத்திருப்பார்.
இசைச் சக்கரவர்த்தினியின் பயணம் முடிவடைந்தாலும்,
அவரது இனிய குரல் என்றென்றும் நம்முடன் வாழும்.
அமைதியாக, இன்பமாக, சுவர்க்கத்தில் பாடிக் கொண்டிருக்கும்
எம் அன்பு ஜானகி அம்மாவுக்கு நம் ஆழ்ந்த அஞ்சலி.
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
சிங்காரவேலனின் திரை இசைப் பயணம் தொடங்கி 48000 பாடல்களுக்கு மேல் பல மொழிகளில் பாடி ரசிகர்கள் மனம் நிறைத்து விருதுகள் பலவால் கெளரவிக்கப்பட்ட இசைக்குயிலின் இறப்பு திரையுலகிற்கு பேரிழப்பு...எளிமையின் பண்பின் அடக்கத்தின் உருவமாய் வாழ்ந்த எஸ்.ஜானகி அம்மா அவர்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி.