அமெரிக்கா கடும் தாக்குதல்; ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்
நமது நிருபர்
ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதுடன், சைப்ரஸ் நாட்டு கப்பலையும் தாக்கியது; அமெரிக்கா புதிய தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது.
மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த பி ப்ரவரி இறுதியில் தாக்குதலை தொடங்கின. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர நடந்த பேச்சில், தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில், சமீபத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் சென்ற மூன்று வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதில் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தார். மேலும், ஈரானுடன் பேச்சு நடத்துவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதுடன், சைப்ரஸ் நாட்டு கப்பலையும் தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்துக் கொண்டிருந்த சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கப்பல் மீது ஈரான் அப்பட்டமான தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது இந்த வாரத்தின் மூன்றாவது கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியது. இத்தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இயந்திர அறையில் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக அக்கப்பலால் தனது பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வைக்கப்பட்ட பிறகு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதை நிரூபிக்க ஈரானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது; ஆனால், ஈரான் மீண்டும் அதில் தோல்வியடைந்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, அந்த ஜலசந்தியில் தடையின்றி பயணிக்கும் மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனைத் தொடர்ந்து முடக்குவதன் மூலம், அந்நாட்டிற்கு அமெரிக்கா கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் தலைமைத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
@block_G@
மூடியது!
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது தலையீட்டை நிறுத்தும் வரை, முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்தது. மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக அறிவித்துள்ளது.block_G
வாசகர் கருத்து (4)
Santhakumar Srinivasalu - ,
12 ஜூலை,2026 - 11:57 Report Abuse
ஈரான் ஓமன் அழிந்தால் தான் உலகத்திற்கே மிகப் பெரிய சுதந்திரம்! 0
0
Reply
RK - ,
12 ஜூலை,2026 - 10:24 Report Abuse
தீவிரவாதத்தை அழித்தொழிக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள். 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
12 ஜூலை,2026 - 09:35 Report Abuse
ட்ரம்ப் அமெரிக்க President ஆக இருக்கும் வரை அமெரிக்காவும் முன்னேறிப் போவதில்லை.வேறு சில நாடுகளும், டிரம்ப்பால், டிரம்ப்பின் முடிவால், உலகமே இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
Trump தேவையில்லாமல் அண்டை நாட்டுக்குள் மூக்கை நுழைப்பது தவறான விஷயம். இதற்கு உலகம் Trump-க்கு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும் உலகத்தில் மொத்தம் நூற்றி தொண்ணூத்தி ஐந்து நாடுகள் உள்ளன.இந்த நாடுகள் அனைத்திற்கும் டிரம்ப் தலைவர் அல்ல.டிரம்ப் எதுவும் முடிவெடுக்க முடியாது.இது அந்தந்த நாட்டின் இறையாண்மையை பாதிக்கின்றது.காரணம், டிரம்ப்பின் தலையீட்டால். டிரம்ப்பை தட்டிக் கேட்க இந்த உலகத்தில் யாரும் இல்லையா? ட்ரம்ப்பின் அடாவடித்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா? இதற்கெல்லாம் யார் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்கள்? ட்ரம்ப்பின் அடாவடித்தனம் முதலில் வெனிசுலா அதிபரை கைது செய்தார்.பிறகு கனடாவை அமெரிக்காவுடன் ஐம்பத்தி ஒன்னாவது மாகாணமாக இணைத்துக் கொள்கிறேன் என்றார்.அப்புறம் கிரீன்லாந்து எங்களுக்குச் சொந்தமானது என்றார்.இப்படி, டிரம்ப்பின் அடாவடித்தனம் அளவே இல்லை. தீவிரவாதத்தை அடக்குவேன் என்று சொல்லி, டிரம்ப் தீவிரவாதியாக மாறிவிட்டார். இன்று உலகம் அமைதியின்றி இருப்பதற்கு காரணம் அமெரிக்க அதிபரேஅமெரிக்க அதிபரே. என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே போல், டிரம்ப் செய்வதை மன்னிக்கவும் முடியாது. இதற்கு உலகம் ஒன்று சேர்ந்து "டிரம்ப்புக்கு" மணியடிக்கவும். 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
12 ஜூலை,2026 - 09:30 Report Abuse
அணு ஆயுதம் வைத்து இஸ்ரேலை அழிக்க ஈரானுக்க்கு நோக்கம். ஈரானின் எண்ணையைத் திருட அமெரிக்கா ஆர்வம்.உலக மக்களுக்கு நஷ்டம். இரு நாடுகளும் திருந்த வாய்ப்புகள் குறைவு. 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement