சாலையில் கண்டெடுத்த 5 பவுன் தங்க நகை; போலீசில் ஒப்படைத்த கட்டுமான தொழிலாளர்களுக்கு சபாஷ்!
-நமது நிருபர்-
சாலையில் கண்டெடுத்த ஐந்தே கால் பவுன் தங்க நகையை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த கட்டுமானத் தொழிலாளர் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் சத்யா(45). அதே ஊரை சேர்ந்தவர் சசிகலா(44). கட்டட தொழிலாளிகள். இவர்கள் இருவரும் நேற்று சமுத்திராபட்டிக்கு கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சமுத்திராபட்டி குளக்கரை பகுதியில் சாலையில் கேட்பாரற்று ஒரு பர்ஸ் கிடந்தது.
அதை எடுத்த இருவரும் திறந்து பார்த்த போது அதற்குள் ஐந்தே கால் பவுன் தங்க நகை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நத்தம் காவல் நிலையம் சென்ற இருவரும் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் திண்டுக்கல்- தண்டல்காரன்பட்டியை சேர்ந்த சிவக்குமார், 30,- சினேகா, 23, ஆகியோர் சேக்கிபட்டி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பைக்கில் சென்ற போது தவற விட்டது தெரியவந்தது.
அவர்களை வரவழைத்த போலீசார் உரிய ஆவணங்களை சரி பார்த்து அவர்களிடம் நகையை ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த நகையை, நேர்மையுடன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த தொழிலாளர்கள் சத்யா, சசிகலா ஆகியோரை நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., அபினேஷ் உள்ளிட்ட போலீசாரும், நகையை பெற்று கொண்ட தம்பதியினரும் பாராட்டினர்.
இதுவே ஒரு அத்தாட்சி நமது முதல்வர் விஜய்யின் அரசு நடக்கும்போது மக்கள் எப்படி நடந்து கொள்கிறர்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இதைவிட மக்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் நகை திருப்பி கொடுத்தவர்களை முதல்வரே நேரில் அழைத்து பாராட்ட வேண்டும் இது ஒரு தூண்டு கோல் ஆகும். ஐந்து லட்சம் பெறுமானமுள்ள நகையை போலீசிடம் திருப்பி கொடுத்தார்கள் என்றால் அவர்களின் மனதை பாராட்ட வேண்டும்
5.25 பவுன் அதாவது ரூ 5.25 லட்சம் சுமாராக???போலீசில் ஒப்படைத்தார்கள் அந்த நல்லவர்கள்????இதற்கு ஒரு ஐடென்டிட்டி கூட இல்லை???ஆட்டையை போட்டிருந்தாலும் யாராலும் கண்டு பிடித்திருக்கமுடியாது???அப்படியும் அந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு சன்மானம் என்று கொடுக்க ஏன் முன்வரவில்லை??? போலீஸ்??? நகை உரிமையாளர்???
ஆட்ச்சி மாற்றமும் ஒரு காரணமுமாக இருக்கலாம். இதே திராவிட மாடல் அரசாக இருந்திருப்பின் எடுத்தவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆட்சியாளர் எப்படியோ அப்படித்தான் பொதுமக்களும் என்பதற்கு இதுவே ஆக சிறந்த உதாரணம். கண்டெடுத்து ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே.
எங்கே இருந்து உங்கள பிடிச்சங்க. ஆட்சி மாற்றத்துக்கும் இவங்க பண்ணதுக்கும் என்ன சம்பந்தம்?
பொதுமக்கள் பொதுவாக நல்லவர்களே ...... ஆனால் அரசியல்வியாதிகள் ??
இப்பொழுதெல்லாம் மக்கள் தொலைக்கும் விலையுயர்ந்த பொருட்கள் ஒரு சில நல்லவர்களிடம் மட்டுமே கிடைப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த நல்லவர்கள் அதை உரியவர்களிடம் சேர்ப்பது மிகவும் பாராட்டுக்குரியதாக இருக்கிறது. இப்படி ஒருசில நல்லவர்கள் நம்மிடையே இருப்பதால்தானோ என்னவோ மழை குறைவாக பெய்தாலும், ஓரளவுக்கு பெய்துகொண்டுதான் இருக்கிறது. வாழ்க அப்படியாப்பட்ட நல்ல மனிதர்கள்.
வாழ்த்துக்கள் அம்மாமேலும்
-
ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்: உரிமையாளர்களை தேடும் ஈ.டி., அதிகாரிகள்
-
பட்டியலில் பெயர் இருந்தும் லேப்டாப் கிடைக்கவில்லை: கலெக்டரிடம் மாணவர்கள் புகார்
-
பகலில் எரியுது லைட்டு... மின்சாரம் வேஸ்ட்டு!
-
சாலையோரத்தில் கொட்டும் கட்டட கழிவுகள் ஆற்றில் கலப்பதால் விலங்குகளுக்கு ஆபத்து
-
ஏ.பி.வி.பி., ஸ்தாபன தினம் பொதுக்கூட்டம்
-
மகனிடமிருந்து சொத்துகளை மீட்டு தரக்கோரி தம்பதி தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு