குழந்தைகளை தூக்கில் போட்டு தற்கொலை செய்த கட்டட தொழிலாளி: மேட்டூரில் அதிர்ச்சி

மேட்டூர்: மேட்டூரில் இரு குழந்தைகளை தூக்கில் போட்ட கட்டட தொழிலாளி, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஆண்டிக்கரை அடுத்த மங்கலூரை சேர்ந்தவர் வல்லரசு( 27).கட்டட தொழிலாளி. மனைவி பிரியா (25). 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்கள் மேட்டூர் ராஜகணபதி நகரில் வசித்தனர். அவர்களுக்கு மைவிழி(4) மகளும், தர்ஷன்(1.5) மகனும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இன்று அதிகாலை வீட்டிலிருந்த மேற்கூரை கம்பியில் தனது இரு குழந்தைகளையும் துப்பட்டாவில் தூக்கில் போட்ட வல்லரசு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மூவர் சடலத்தை மேட்டூர் போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர்

Advertisement