நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்
சென்னை : சென்னை மாநில கல்லூரியில் அரசு மருத்தவ சேவைகளை டிஜிட்டல் முறையில் கொண்டு சேர்க்கும் 'நலம் TN' இணையதள சேவையை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். மேலும் மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்ததுடன், 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
தமிழக அரசு மருத்துவ சேவைகளை டிஜிட்டல் முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நலம் டிஎன் என்ற இணையதளத்தையும் முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். அதன் சின்னத்தையும் அறிமுகம் செய்து வைத்தார்.
139.47 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 86 மருத்துவ கட்டடங்கள், நவீன உபகரணங்களையும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நலம் TN திட்டத்திற்கு பல தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அமைப்புகள் நிதி வழங்கின.
தொடர்ந்து, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட
சுகாதாரத்துறையில் உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் உட்பட பணி 2 ஆயிரம் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். அதில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் ஆவார்கள்.
மாற்றுத்திறனாளி பிரிவில் தேர்வான டாக்டர் ஒருவருக்கு, மேடையில் இருந்து இறங்கி சென்ற விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.
தினமலர் நேரலை
நலம் TN இணையதளத்தை துவக்கி வைத்து 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை விஜய் வழங்கிய நிகழ்ச்சி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைக் காண:
https://www.youtube.com/watch?v=rkkXPd_mt2M
வாசகர் கருத்து (6)
manian - ,
15 ஜூலை,2026 - 12:50 Report Abuse
please look at Stanley hospital 0
0
Reply
GRK - Bengaluru,இந்தியா
14 ஜூலை,2026 - 13:58 Report Abuse
கடந்த கால ஆட்சியின் பொது தேர்வானவர்கள் இவர்கள் . அட்லீஸ்ட் அவர்களுக்கு ஒரு நன்றி கூறலாமே . 0
0
Reply
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
14 ஜூலை,2026 - 12:43 Report Abuse
நன்பா, அடுத்த 6 மதித்திலிருந்து 1 வருடம் வரை திறந்துவைக்கும் அணைத்து கட்டிடங்களும், திமுகா ஆட்சியில் கட்டப்பட்டவை. அவர்கள் லஞ்சம் , அரசு விசாரித்து தண்டனை வாங்கிக்கொடுக்கலாம்.. அதைவிட்டு சும்மா வாய் இருக்குனு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது.. 0
0
Reply
Sugir Raj - ,இந்தியா
14 ஜூலை,2026 - 12:42 Report Abuse
தலைமை செயலாளர் சோகமாக நிற்கிறார்.முதல்வர் ஆணைகளை கொடுக்கும் போது ஏதோ வலியில் நின்று கொண்டு இருப்பத? 0
0
Reply
VSMani - ,இந்தியா
14 ஜூலை,2026 - 12:04 Report Abuse
திருட்டு திராவிட கழகம்கள் இந்த 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினால் ஒருவரிடம் குறைந்தது 1 லட்சம் லஞ்சம் வாங்கி 20 கோடி ஆட்டையைப் போட்டிருப்பார்கள். .ஒருவரிடம் 1 லட்சம் மட்டுமா வாங்குவார்கள்? ஒவ்வொருவரிடம் அரசு வேலை என்று சொல்லி 10 லட்சம் வரை லஞ்சம் வாங்கி 200 20 கோடி ஆட்டையைப் போட்டிருப்பார்கள். இப்போது அத்தனை பணி நியமனங்களும் முற்றிலும் இலவசம். இப்படி இலவசமாக அரசு பணி நியமன ஆணைகளை பெற்ற ஒவ்வொருவரும் லஞ்சம் வாங்காமல் சிறப்பாக சேவை செய்யவேண்டும் இவர்கள் அரசிடம் இலவசமாக பெற்றதை மக்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டும். 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
14 ஜூலை,2026 - 12:55Report Abuse
அப்போ இந்த பணிநியமனங்களுக்கு எவனும் பணம் தரவில்லை, வாங்கவில்லைன்னு நீ நம்புறே? அப்படியே தற்குறியாகவே இருந்துக்க.ஆனா வெட்டியாக இப்படி பொய்ப்பிரச்சாரம் பண்ணாதே.கவர்மெண்ட் பிளீடர் பணிக்கு 1200 கோடி லஞ்சம் வெள்ளமாக ஓடியிருக்கு. பள்ளிக்கல்வி துறையில் குறைந்தபட்சம் 200 கோடி கழுக்குப்பார்வையில் சிக்கியிருக்கு. சிக்காதது இன்னொரு 1000 கொட்டியாவது இருக்கும் ன்று பள்ளிகளின் முதலாளிகள் கண்ணீருடன் சொல்கிறார்கள். 0
0
Reply
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்
Advertisement
Advertisement