பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் டோக்கன்
சென்னை: பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட அறிவிப்பு:
முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், அதிக பத்திரப்பதிவு நடக்கும் என்பதால், பொது மக்கள் கோரிக்கை அடிப்படையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, ஆனி மாதத்தின் கடைசி நாளான நாளை, அதிகமானோர் பத்திரப்பதிவு செய்ய, ஆர்வம் காட்டுவர். இதை கருத்தில் வைத்து, சார் - பதிவாளர் அலுவலகங்களில், நாளை கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படும்.
வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்கள்; தினசரி, 200 டோக்கன்கள் வழங்கப்படும் இடங்களில் நாளை, 300 டோக்கன்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்
Advertisement
Advertisement