ரயில் நிலையங்களில் கஞ்சாவுக்கு எதிராக சோதனை

சென்னை: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, மாநிலத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில், மோப்ப நாய் உதவியுடன், போலீசார் சோதனை நடத்தினர்.

கடந்த, 12 நாளில், 1,270 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட, 472 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement