ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் சிக்கினார்

பொன்னேரி: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவரப் படுவதாக வந்த தகவலின்படி, பொன்னேரி - தச்சூர் சாலையில், செங்குன்றம் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் கண்கா ணிப்பில் ஈடுபட்டனர்.

பெருஞ்சேரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பொன்னேரி நோக்கி சென்ற 'ஸ்விப்ட்' காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், 2 லட்சம் ரூபாய் மதிபுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.

வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரித்ததில், அவர் பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்த பிரதீப், 31, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, விற்பனையில் ஈடுபட்டதும் உறுதியானது. அதையடுத்து, பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.

Advertisement