பதுங்கிய 'பாலு'; ஒதுங்கிய 'வேலு': ஆரவாரமிழந்த கோவை திமுக - அதிமுக
கோவை: கோவையில் இதுநாள் வரை கோலோச்சிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜியும், வேலுமணியும் தற்போதைய அரசியல் களத்தில் பார்க்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
கோவை அ.தி.மு.க.,வில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அவரது கட்டுப்பாட்டுக்குள் கட்சியையும், நிர்வாகிகளையும் வைத்திருந்தார். மேடையில் உள்ள இருக்கைகளில் யார், யாரை அமர வைக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிப்பார். அவர் சிக்னல் கொடுத்தால் மட்டுமே கூட்டங் களில் பேசுவதற்கு வாய்ப்பு தரப்படும். அந்தளவுக்கு கட்சியை தன் கைக்குள் வைத்திருந்தார்.
அவர்கள் கூறுகையில், 'எம்.ஜி.ஆர்., ஜெ., விசு வாசிகள், அ.தி.மு.க., தொண்டர்கள் 'சைலண்ட்'டாக இருக்கின்ற னர். வேலுமணி பின்னால் செல்வதற்கு யாரும் தயாராக இல்லை.
தொண்டாமுத்துாரில் அவரால் வளர்ந்தவர்கள் சிலர் ஆதரவு கொடுக்கலாம். கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்க வேண்டும்; இளைஞர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை ஈர்க்கக் கூடிய நபர்களாக இருக்க வேண்டும். போராட்டம் நடத்தினால், அவர்களது பேச்சு மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும்; சிந்திக்க வைக்க வேண்டும். புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். அதற்கான வேலை அடுத்தடுத்து நடக்கும் என எதிர்பார்க்கிறோம். பதவிக்காக சில நிர்வாகிகள் மட்டுமே மாற்றுக் கட்சிக்கு ஓடுகின்றனர்; தொண்டர்கள் ஓடவில்லை' என்றனர்.
தி.மு.க.,வின் நிலை
இதேபோல், மேற்கு மண்டல தி.மு.க.,வை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அ.தி.மு.க., கோட்டையில் ஓட்டையை போட்டு, தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தவர். சமீபகாலமாக வழக்குகளில் சிக்கி, ஒதுங்கி இருக்கிறார். தற்சமயம் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு சூழல் மாறியிருக்கிறது. கட்சியினரை 'ஆக்டிவ்'வாக வைத்திருக்க, தலைமை அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
கட்சியின் நிலை என்ன என நிர்வாகிகள் சிலரிடம் கேட்டதற்கு, 'தேர்தல் வெற்றிக்கு கட்சியினரை வழிநடத்திச் செல்ல தலைமையால் நியமிக்கப்பட்டவரே செந்தில்பாலாஜி. அவர் மட்டுமே கட்சியல்ல. வார்டு வாரியாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்துகிறோம். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் தி.மு.க., மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணியினர் இணைந்து பதிலடி கொடுக்கிறார்கள். செந்தில்பாலாஜி முன்னின்று நடத்த வேண்டிய கூட்டங்கள், அவர் இல்லாமல் நடத்தப்படுகின்றன. அவரது வழிகாட்டுதல் நிர்வாகிகள் மூலம் வந்தடைகின்றன' என்றனர்.
வேலுமணி மற்றும் செந்தில் பாலாஜி இருவரும் நண்பர்கள். திமுக காலத்தில் வேலுமணி மீது ஊழல் குற்ற வழக்குகள் பதியபடாததற்கு காரணமே இந்த நட்பு தான். திமுக ஆட்சி காலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு காரணமே இந்த நட்பு தான். அதனால் செந்தில் பாலாஜி திமுகவில் இன்றும் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிட்டார். ஆனால் வேலுமணிக்கு இன்றும் அவருக்கு கிணத்துக்கடவு மதுக்கரை ககசாவடி போன்ற இடங்களில் செல்வாக்கு உண்டு. அதிமுக கொங்கு மண்டலத்தில் தோற்க முக்கிய காரணம் இந்த வேலுமணி தான். திமுகவின் கொங்கு மண்டல வெற்றி செந்தில் பாலாஜியை திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றி விட்டது. உதயநிதியே நினைத்தாலும் செந்தில் பாலாஜியை தவிர்க்க முடியாது. ஆனால் பாருங்கள் செந்தில் பாலாஜி நிலைமையை ஓட்டுக்கு ஐந்தாயிரம் கொடுத்து கூட அவரால் வெறும் இரண்டாயிரத்து சில்லறை வாக்குகளில் தான் வெற்றி பெற முடிந்தது. ஆகவே அவரது வெற்றி உண்மையில் அவரது மனச்சாட்சி படி வெற்றியாக இருக்காது அது தோல்வியே தான். இதுவே வேலுமணிக்கு ஒரு எச்சரிக்கையும் கூட.
அவன் ஊரில் மட்டும் தான்
மற்றபடி இல்ல. நானும் : கிணத்து கடவு. தான்
அதல்லாம் இருக்கட்டும். ஊழலுக்கு எதிராக முதல்வர் பேசியதற்கு ஆமோதிப்போ பாராட்டோ எதையும் தெரிவிக்காமல் முன்னாள் ஆட்சியாளர்களின் அல்லக்கைகளாக இருந்துவிட்டு ஆட்சி மாறியவுடன் அங்கேயிருந்து கழட்டிக் கொண்டு ஓடோடி வந்து இந்நாள் ஆட்சியாளர்களுக்கு முட்டு குடுக்கும் அல்லுசில்லுகள் கண் காது வாயைப் பொத்திக்கொண்டு சைலன்ட் மோடில் போய்விட்டதன் மர்மம் என்னவோ.
என்னதா இளைஞர் அணி இளிச்ச வாயனுவோ அணிகளால் பதிலடி திருட்டு திமுகவினர் கொடுத்தாலும் மக்கள் அவர்கள் அடித்த கொள்ளையை தமிழகத்தில் வளங்களை சுரண்டியதை மறக்கவில்லை இவ்வளவு ஏன் சின்னதத்தியும் மலை முழுங்கி மருமகனும் திருட்டு மாடல் ஆட்சி வந்த ஆறே மாதத்தில் ரூபாய் 30000 கோடி கொள்ளை அடித்து வைத்து கொண்டு அதை எப்படி கணக்கில் காட்டுவது என்று முழிக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை அவர்களின் நிதி மந்திரியே கூறியதை இன்று வரை மறுக்கவில்லை என்பதை மக்கள் மறக்கவில்லை....
கம்யூனிசம் போல திராவிஷமும் கலாவதி ஆகி விட்டது. மிக விரைவில் திராவிஷ கட்சிகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான்.
இதே ஆதவ் அர்ஜுனா கடந்த ஒரு மாதமாக பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறாரே அதை பற்றி ஏன் தினமலர் கட்டுரை வழங்கலை ஒரு வேளை ஆளும் கட்சி என்பதாலோ ?மேலும்
-
பணி ஆணை வழங்கும் விழா
-
தாசில்தார், துணை தாசில்தார் கலந்தாய்வு அரசாணை பெற்று நடத்த கோரிக்கை
-
கருவேல மரங்களால் நீராதாரம் பாதிப்பு விவசாயிகள் கவலை
-
ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாபில் நிழற்குடை அவசியம்
-
இன்பாக்ஸ் மருத்துவமனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
-
போதைத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக் கூட்டம்