சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேனா? சீமான் சொல்வது இதுதான்!
திருப்பூர்: தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியா, இல்லையா என்ற கேள்விக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் சீமான் கலந்து கொண்டார். திரண்டிருந்த ஏராளமானவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது;
நான் ஒன்றும் மன்னன் இல்லை. மந்திரி மகன் இல்லையே, கூப்பிட்டால் அத்தனை பேரும் எனக்கு ஓட்டு போடுவதற்கு. தோற்று போனாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு ஓட்டு போட்டு, அங்கே இருந்து என்னை போக வேண்டாம் என்று கூறி உள்ளனர்.
இப்போதும் கூட பாரதிராஜாவின் மறைவின் போது அவரது 30ம் நாள் காரியம் செய்து கொண்டு இருக்கும் போது என் தந்தை வயது உள்ள ஒருவர் பின்னால் இருந்து என் தோளை தட்டினார்.
50 பேருடனாவது நீ உள்ளே சென்றுவிடுவாய்(சட்டசபையை குறிப்பிடுகிறார்) என்று ரொம்ப ஆசைப்பட்டு கொண்டிருந்தேன். நடக்கவில்லை, நீ விட்டுவிடாதே. இடைத்தேர்தலில் நின்றாவது நீ உள்ளே(சட்டசபைக்குள் எம்எல்ஏவாக) சென்றுவிடு என்றார். நான் உறுதியாக போய்விடுகிறேன் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தேன். இந்த சிரிப்புடன் நீ உள்ளே செல்ல வேண்டும் என்றார்.
இவ்வாறு சீமான் பேசினார்.
அண்மையில் முடிந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்கு சில நாட்கள் கழித்து, எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமா பெரும் விவாதங்களை எழுப்பி இருக்க, தவெகவுக்கு எதிராக பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்படுகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன. தற்போது, இன்றைய சீமானின் பேச்சு இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவது நிச்சயம் என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.
எழுதி வச்சிக்கோங்க பொது வேட்பாளரை நின்னாலும் தோற்பான் அந்த மடையன் .. அப்படியே போனாலும் அவனை தூக்கி வெளியில் எறிந்து விடுவார்கள் காரணம் பைத்தியங்களை உள்ளே வச்சுக்க முடியாது .. மக்கள் இன்னும் முட்டாள்கள் இல்லை சீமான் என்கிற பைத்தியம் தோற்பான்
வாழ்த்துக்கள்
வாய் வாய் வாய், இந்த வாய் இல்லேன்னா ஆமைக்கறியானை நாய் தூக்கிட்டு போயிடும். திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பல்க்காக அதிமுக பக்கம் போய்விட கூடாது என்பதற்காக திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை லைட்டாக டேமேஜ் செய்து திமுக வெற்றிக்காக மாப்ள சார் பைனான்சில் நடத்தப்படும் கட்சி அது. தேர்தலில் நின்றாலே போதும் பொட்டி வந்துவிடும் எனும்போது ஆமைக்கறியான் ஜெயித்து ஒன்னும் ஆவப்போறது இல்லை. ஆனால் பாவம் இது தெரியாமல் தேர்தலில் போட்டியிடும் அந்த கட்சியில் நிற்கும் வேட்பாளர்கள். இந்தாளு வாய்சவடாலுக்கு மயங்கும் அப்பாவி பொதுமக்கள்.
தமிழ் தமிழ் என்று எப்போதும் புலம்பி எல்லா தொழில்களையும் அரசே நடத்தவேண்டும் என்று கூப்பாடு போடும் நாம் தமிழர் சீமானின் மகன் படிப்பது இன்டர்நேஷனல் ஸ்கூலில் அங்கு குறைந்தது நான்கு மொழிகள் கற்பிக்கப்படுகிறது.
தானும் படுக்காது, தள்ளியும் படுக்காது என்பது போல இந்தாளு ஒவ்வொரு தேர்தல்களிலும் வீணாக போட்டியிட்டு திருட்டு திமுகவின் எதிர் வாக்குகளை பிரித்து அவர்கள் மீண்டும் ஜெயிக்க வழி வகை செய்பவர். உதாரணத்திற்கு கே என் நேரு ஜெயித்தது வெறும் நாலாயிரம் ஓட்டு வித்தியாசத்தில். அதே தொகுதியில் சீமானின் வேட்பாளர் வாங்கியது எட்டாயிரம் ஓட்டுக்கள். இதுபோன்ற அரசியல் வியாதிகளை அரசியலைவிட்டே துரத்திவிடவேண்டும். அப்போதுதான் தமிழகம் உருப்படும்.
அவனுக்கு காசுதான்
முக்கியம்
வெட்டி பயல்
சரியாகச் சொன்னீர்கள்!