மாநகராட்சியில் சுய விபர கணக்கெடுப்பு பணி தொடக்கம்

கரூர்:கரூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், சுய விபர கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. வீடு விபர கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடக்கிறது. வரும் ஆக., 1 முதல், 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. அதற்காக, நேற்று சுயவிபர கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின.

கரூர் மாநகராட்சி, காந்தி கிராமம் மூன்றாவது மண்டல அலுவலகத்தில், சுயவிபர கணக்கெடுப்பு பணி தொடக்கம் மற்றும் பயிற்சி நடந்தது. அதில், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement