தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய்
சென்னை: தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1ம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட அண்ணாதுரை சட்டசபையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழகம் உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
@block_G@
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1956ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
அண்ணாதுரை 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.block_G
சிறப்பு வீடியோ!
தமிழ்நாடு நாள் இனி 2 முறை கொண்டாட்டம்; முதல்வர் விஜய் அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஒரே ஒரு நாள் தமிழ் நாட்டுக்கு மீதி திராவிட நாட்டுக்கா... தமிழகம் சாராயத்தால் பெருமை உடைத்து. கோடு போட்டே ரோடு போட்டதாக திராவிடர்கள் பணத்தை அள்ளிய பெருமையும் உடைத்து.
இது ஒரு வழக்கமான டயலாக்...கடந்த 60 வருடமாக கேட்டு கேட்டு புளித்து போன ஐட்டம். இன்னும் எத்தனை ஆண்டுக்கு பிறகும் இதே உறுதி ஏற்கும் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தள்ள படும் என்று ஊகிக்க முடியவில்லை...
மதுரையில் உலக தமிழர் மகாநாடு வெகு விரைவாக கூடட vendum..
We trust u will do it. No compromise on our tamil nadu progress & get top rank among states
2.. Excess rain water to b protected & stored in new reserviours.
3.trees planting in all houses.
போதை, குற்றங்கள், அடிப்படைக் கட்டமைப்பில் பெருங்குறை ........ இந்த லட்சணத்தில் முதல் மாநிலம் ??
Hope they don't bring tamilnadu down the ladder.
நமது மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் ஏற்கப்பட்டு இருக்கும்போது ஏன் தமிழகம் என்று, தமிழ் நாட்டின் முன்னணி செய்தித்தாளில் எப்பொழுதும் குறிப்பிடுகிறீர்கள் .
Oppose national language, abuse Hindus, encourage graft, demolish temples, take temple money and donate to other people, buy votes make sure most are addicted to liquor, and then keep chanting this slogan.- We will change Tamil Nadu as number one?
இதற்க்கு முனாலிருந்தவரும் இதே டைலாக்கை வேறு மாடுலேஷனிலே சொன்னாரு. 5 வருஷம் ஓடிடுச்சு 5 லட்சம் கடன் வாங்கினதுதான் மிச்சம். பாக்கலாம்.
குழந்தை பிறந்த தேதியை பிறந்த நாள் என்று கொண்டாடுவார்கள், இங்கு பேர் வைத்த நாளை கொண்டாடுகிறார்கள். நல்ல கூத்து.மேலும்
-
சட்ட விரோதமாக மண் அள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
-
விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் கொண்ட தமிழகம்: முதல்வர் விஜய் பெருமிதம்
-
பதவி பறிபோன திமுக விஐபி அமைச்சரை சந்திக்க வந்தது ஏன்?