தொழில் பயிற்சி கருத்தரங்கம்

திருப்புத்துார்,ஜூலை 24-

திருமயம்  லேனாவிலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் ‛தரவு அறிவியலுக்கான பைதான் நிரலாக்கம்’ குறித்த தொழில் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.

கல்விசார் முதன்மையர் சீனிவாசன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார். இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் துவக்க உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன் சிறப்புரையாற்றினார். முதல்வர் பாலமுருகன், ஐ சி டி முதன்மையர் ராபின்சன் வாழ்த்தினர்.

சென்னை ரெஸ்ப்ராப் லேப்ஸ் நிறுவன இணை நிறுவனர் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் பாலச்சந்தர் மோகன்தாஸ் தரவு அறிவியலுக்கான பைதான் குறித்த செய்முறைப் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கினார்.

Advertisement