‘புதிய ஓய்வூதியத்துக்கான வழிமுறைகள் வகுக்கணும்’
கோவை: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர் கூட்டம், கீதா ஹால் ரோட்டில் உள்ள ஓட்டலில் சங்க துணைத்தலைவர் நாகநாதன் தலைமையில் நடந்தது.
சங்க பொதுச்செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது:
ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் உரிமை. ஓய்வூதியர்களுக்கு அது சமூக பாதுகாப்பை அளிக்கிறது. மத்திய அரசு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.
பழைய ஓய்வூதிய திட்டம்தான் எங்களுக்கு ஏற்புடையது. கடந்த ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான வழிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. த.வெ.க. அரசு விதிகளை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசு, ரூ.25 லட்சமாக உயர்த்திய பணிக்கொடை தொகை, மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, 12 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்