டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்கள்; பாகிஸ்தானின் 480 சமூக வலைதளக்கணக்குகள் முடக்கம்
புதுடில்லி: டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டில்லி போலீஸ் முடக்கியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் சிலர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். எனவே, இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டில்லி நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தூண்டி , இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தானில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தப் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை கண்டறிந்து, அதனை டில்லி போலீசார் முடக்கி உள்ளனர்.
இது தொடர்பாக டில்லி போலீஸ் உதவி ஆணையர் சுமித் ஜா எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக ஊடகக் கணக்குகளில், போராட்டம் குறித்து பகிரப்படும் போலியான தகவல்களை இளைஞர்களும், மாணவர்களும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், இந்த சமூக விரோத ஊடகக் கணக்குகள், ஆப்பரேஷன் சிந்தூர் நிகழ்வின் போதும் தீவிரமாக செயல்பட்டதாகவும், தற்போதைய போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (5)
Natarajan N - ,இந்தியா
24 ஜூலை,2026 - 14:46 Report Abuse
கத்தி இன்றி ரத்தம் இன்றியுத்தம் ஒன்று வந்திடும்,அதுதான் தேர்தல் எனப்படும் யுத்தம்.அதுவரைபோராட்டத்தைகைவிட்டு பொறுமையை கடை பிடியுங்கள். 0
0
Reply
Natarajan N - ,இந்தியா
24 ஜூலை,2026 - 14:37 Report Abuse
கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது, அதுதான் தேர்தல் எனப்படும் யுத்தம்.எனவே அந்த தேர்தல் எனப்படும் யுத்தம் வரும்வரை போராட்டத்தை கைவிட்டு பொறுமையை கடைபுடுக்கவும். 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
24 ஜூலை,2026 - 11:45 Report Abuse
அக்னீவீர் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் என்ன பயன்? அவர்கள் அனைவருக்கும் கலவரத் தடுப்புக் கட்டுப்பாடு, ஆயுதங்களைப் பயன்படுத்துதல், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பவற்றில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஜந்தர் மந்தரிலோ அல்லது தலைநகரின் பிற பகுதிகளிலோ போராட்டம் நடக்கும்போதெல்லாம் ஒரு லட்சம் அக்னீவீர்களைக் கொண்டு வாருங்கள்.
ஒரு பயலும் வாலாட்ட மாட்டான். ரெண்டாவது ஜாமின் இல்லாத சட்டத்தில் அவர்களை அர்ஸ்ட் செய்து குறைந்தது 6 மாதம் ஜலீல் அடைத்து பின்பு கேஸை நடத்தணும். 6 மாசம் காளி தின்ன பூத்தி வரும் 0
0
Reply
ManiK - ,
24 ஜூலை,2026 - 11:06 Report Abuse
உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் கட்டுக்கடங்காத சுதந்திரம் மக்களுக்கு இருக்கிறது. ஆதனால் மக்கள் முக்கியமாக இளைஞர்கள் மிகவும் பொருப்புடனும், சுயகட்டுப்பாடு கொண்டு இணையத்தையும் சமூகவலைதளத்தை பயன்படுத்த வேண்டும். இப்போதெல்லாம் நாட்டை சீர்குலைக்க ஒரு சிறிய பொய்செய்தி போதும். அரசாங்கம் மக்களைவிட மிகமிக பொருப்புடன் நடந்துகொண்டு கண்காணிக்க வேண்டும். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
24 ஜூலை,2026 - 09:17 Report Abuse
நம் நாட்டிலுள்ள பெரும்பாலான காவல் நிலையங்கள் அதிகப்படியான பணிச்சுமை, போதிய உபகரணங்கள் இல்லாமை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான படைகளைக் கொண்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் போராட்டத்தைக் கையாள்வதில் டெல்லி காவல்துறை எண்ணிக்கையில் மிகவும் பின்தங்கியுள்ளது. டெல்லி காவல்துறையின் மொத்த காவலர்களின் எண்ணிக்கை சுமார் 83,000 ஆகும், இவர்கள் 1,484 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைதிக் காலத்தில், ஒரு டெல்லி காவலரை விட சுமார் 259 பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். இந்த அளவிலான ஒரு போராட்டத்தின் போது சொல்லவே தேவையில்லை. பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதை அந்த பிரிவினைவாத ரௌடிக் கும்பல் காணும்போது, அது தைரியமாக சென்று தாக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்கிறது. எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்போது கட்டுப்பாட்டை நிலைநாட்ட, காவலர்கள் அதிக பலத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் மிகவும் பதற்றமான ஒரு பகுதியில் இவை அனைத்தும் நடப்பதால், நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் காவல் படையிடமிருந்து (CRPF) கூடுதல் பட்டாலியன்கள் வரவழைக்கப் பட்டது. 0
0
Reply
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்
Advertisement
Advertisement