காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு: எம்ஜிஆர் பாணியில் கர்நாடகா செல்கிறார் விஜய்
சென்னை: காவிரி பிரச்னைக்கு, பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பாணியை பின்பற்றி முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளார்.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., என, நான்கு அணைகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றில் சேமிக்கப்படும் நீரில், ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி.,யை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடவடிக்கை
தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளன.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, இந்த உத்தரவுகளை பெற்றனர். ஆனால், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடக முதல்வர்களை சந்தித்து, நேரடியாக எந்த பேச்சிலும் அவர்கள் ஈடுபட்டதில்லை.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, கர்நாடகா சென்று அம்மாநில முதல்வர்களாக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் குண்டு ராவை சந்தித்து, காவிரி நீர் திறக்க நடவடிக்கை எடுத்தார்.
அதே பாணியை முதல்வர் விஜய் தற்போது கையில் எடுத்துள்ளார். இதற்காக, வரும் 3ம் தேதி பெங்களூருக்கு, தலைமை செயலர் சாய்குமார், நீர் வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு, ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோருடன் முதல்வர் விஜய் செல்ல உள்ளார். அங்கு, கர்நாடக முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக காங்கிரஸ் அரசு தயாராகி வருகிறது. தன் தொகுதியில் மேகதாது அணை கட்டுமானப் பணியை, சட்டசபை தேர்தலுக்கு முன் தொடங்க, முதல்வர் சிவகுமார் தீவிரமாக உள்ளார். எனவே, இந்த பேச்சுவார்த்தையில் காவிரி நீர் திறப்பு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசப்பட உள்ளது.
ஆலோசனை
முதல்வர் விஜயின் பெங்களூரு பயணம் குறித்து, வேளாண் துறை அமைச்சர் வினோத், கும்பகோணத்தில் அளித்த பேட்டி:
மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. காவிரி நம் உரிமை; அதை விட்டுக் கொடுக்க மாட்டோம். கர்நாடகாவில் ஆகஸ்ட் 3ம் தேதி, மேகதாது அணை தொடர்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு, முதல்வர் விஜய் செல்ல உள்ளார்.
இதில், கர்நாடக முதல்வரை சந்தித்து பேசுவார். கர்நாடக அரசு தரப்பில், 'போதிய மழை இல்லை; தண்ணீர் திறக்க முடியாது' என்று கூறப்படுகிறது. இருந்தாலும் தமிழக முதல்வர் நம் உரிமையை கேட்டு பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.
எதிலும் காலம் தாழ்த்தாமல் முடிவு எடுக்க வேண்டும் என்ற விஜய் அவர்களின் மனப்போக்கு, மிகவும் பாராட்டுதலுக்குரியது.
வாழ்த்துக்கள் விஜய் அவர்களே
இது ஒன்னும் சினிமா இல்ல ஆக்ஷன் கட் சொல்ல.
சும்மா பேப்பர் பார்த்து டயலாக் விட
இவர் எம்.ஜி.ஆரும் அல்ல.அங்கு ஆட்சி செய்பவர் அந்தக் காலத்திய கர்நாடக முதல்வர் போல் எம்.ஜி.ஆர் ரசிகரும் அல்ல. இவருக்கு காவிரியின் நெளிவு, சுளிவுகள் முழுதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் அங்கு அரசியலில் சித்து விளையாட்டு காரரான சித்தராமையாவையே வீட்டுக்கு அனுப்பி விட்டு பதவிக்கு வந்தவர்.யார் தமிழக முதல்வருக்கு ஐடியா கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. பல கட்ட பேச்சு வார்த்தைகளில் உடன் பாடின்றி இனி நீதி மன்றம் மட்டுமே தீர்வு என தமிழகம் எப்போதோ முடிவெடுத்து நடுவர் மன்ற தீர்ப்பும் அமலுக்கு வந்து விட்டது. இப்போது போய் திரும்பவும் பேச்சு வார்த்தை என்றால்? ஒன்று மட்டும் நம் முதல்வருக்கு ஞாபகம் இருக்கட்டும். காவிரி என்பது நமது ஜீவாதார, உயிர் நாடி பிரச்சனை.இதில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால் நாளைய வரலாறு மன்னிக்காது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்ற பாடல் ஞாபகம் வருகிறது!
ஒரு வேளை அணை கட்டி விட்டார்கள் என்றால் என்ன நடக்கும்..
அப்படி கட்டிவிட்டால், இதற்கு மேலும் மீண்டும் இன்னொரு அணையை கட்ட அனுமதிக்கமாட்டோம் என கடுமையான எச்சரிக்கை விடுத்து அடுத்த வேலையை கவனிப்பார்கள்.
போவது தவறு இல்லை ஆனா இந்த குழுவில் தமிழக நீர்வள துறை அமைச்சரின் பெயரை காணவில்லை ..முதல்வரை விட முக்கியமானவர் அவர் தான் இந்த பேச்சு வார்த்தையில் .அவரை இட்டுக்குனு போய் வருவதில் என்ன சிரமம் முதல்வருக்கு ?
உண்மை.காவிரி பிரச்சனையை முதல்வர் அளவுக்கு அல்லது முதல்வரை விட அதிகமாக நீர்வளத்துறை அமைச்சர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கணும், அதைப் பற்றிப் பேசணும்.
சாம தான பேத தண்டம் என்ற வகையில், இம்முயற்சி நல்ல முடிவே தொகுதி வரையறை என்றெல்லாம் தென்னிந்திய மாநிலங்களின் உரிமை குறைக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் போது தென் மாநில அரசுகள் ஒற்றுமையாகப் போராட வேண்டும் . பேச்சு வெற்றி பெறாவிடில் நீதி மன்றத்தை நாடலாம் இல்லையேல் நீதிமன்றம் இதனை உங்களுக்குள் பேசிக் முடித்துக் கொள்ளக் கூடாதா என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆந்திர முதல்வரையும் சந்தித்துப் பேசலாம் வட இந்திய முழுமையும் வெள்ளத்தால் அழியும் போது தென் மாநிலங்களில் நீர்த் தட்டுப்பாடு இருப்பதால், இந்திய அளவில் நதி நீர் இணைப்பு குறித்து மோடியிடமும் பேசலாம் கழக அரசு போல எதற்கெடுத்தாலும் போராடாமல் நம் தேவைகளை சீர் செய்து கொள்ள வேண்டும்
Very good initiative of Tamilnadu CM. In fact, in October 1963, our late CM Shri K Kamaraj met Shri Nijalingappa the then CM of Karanataka and Shri Neelam Sanjiva Reddy the ten CM of Andhra Pradesh had a face to face meeting to discuss sharing of Krishna river water and concluded it smoothly. I am sure the forthcoming face to face meeting with Karnataka CM will bring some good response.
Nijalingapaa and great kamarajar are patriots and do not compare them with corrupted politicians. That too karnataka congress highly corrupted.
Utcha Neethi Mandram mattumae theervu Tarum
சட்ட ரீதியாக நடுவர் மன்றத்தை அணுகலாம், எப்பப்பாத்தாலும் மனிதாபிமானமற்ற வகையில் கொடுக்கமாட்டேன் என மீண்டும் மீண்டும் கூறும் அவர்களிடம் அங்கு சென்று கையேந்துவது நமக்கு அவமானத்தை ஏற்படுத்தும்.