'உலக' ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்
ஒன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் பைனலுக்கு இந்திய வீராங்கனை அனாஹத் சிங் முன்னேறினார்.
கனடாவில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் பார்ப் சமேஹ் மோதினர். அபாரமாக ஆடிய உலகின் 'நம்பர்-20' அனாஹத் 3-1 (11-3, 8-11, 11-4, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். உலக ஜூனியர் ஸ்குவாஷ் வரலாற்றில், பைனலுக்கு முன்னேறிய 2வது இந்தியரானார் அனாஹத். இதற்கு முன் 2005ல் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தார்.
பைனலில் அனாஹத், எகிப்து வீராங்கனை ருகையா சலெம் மோதுகின்றனர். இதில் அனாஹத் வென்றால், உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைக்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர், அரசு அலுவலர்கள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வலியுறுத்தல்
-
வாசகர்களை மாண்போடு அணுகும் நாளிதழ்!
-
மூன்று மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கியது தமிழக அரசு: வட்டி செலவு மட்டும் ரூ.14,618 கோடி
-
புகையிலை பறிமுதல் கடத்திய முதியவர் கைது
-
டிப்பர் லாரி மோதி தபால் அலுவலர் பலி
-
சேலத்தில் ஆடித்திருவிழா ஆக., 5ல் விடுமுறை
Advertisement
Advertisement