ஷேர் மார்கெட்டில் நஷ்டம் வாலிபர் தற்கொலை 

புதுச்சேரி: தேங்காய்திட்டு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுராமன், 33; ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புன்னிய கீர்த்தனா. ஒரு மகன், மகள் உள்ளனர்.

ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரகுராமன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ரகுராமன், நேற்று காலை 7 மணிக்கு வீட்டின் வராண்டாவில் உள்ள பேனில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புன்னிய கீர்த்தனா அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement