வேப்பேரி போலீஸ்காரர் சுருண்டு விழுந்து இறப்பு
வேப்பேரி: வேப்பேரி காவல் நிலையத்தில், பணியில் இருந்த போலீஸ்காரர், சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெருமாள், 32; வேப்பேரி காவல் நிலைய போலீஸ்காரர். நேற்று முன்தினம் நள்ளிரவு பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது நண்பர் சேஷனும், பெருமாளும், காவல் நிலையம் வெளியே பேசிக் கொண்டிருந்தனர். பெருமாள், திடீரென மயங்கி, சுருண்டு விழுந்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பெருமாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர். பெருமாள் மனைவி செண்பகவள்ளி, ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Advertisement
Advertisement