கடையில் திருடிய இருவர் கைது

குஜிலியம்பாறை: திருப்பூர் திருமூர்த்தி என்பவர் ஆர்.வெள்ளோட்டில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இரு நாட்களுக்கு முன் இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ஒரு 1. 06 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய குஜிலியம்பாறை போலீசார், கரூர் வெங்கமேடு தினேஷ்குமார் 36, சேலம் அய்யனார் 20, ஆகியோரை பிடித்து விசாரித்ததில் பணம் திருடியதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisement