பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய 3 பேர் கைது
புதுச்சேரி: பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
வாணரப்பேட்டை ஜெயராம் செட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 50. இவரது மனைவி விஜய சுபாஷினி, 46. இவர், முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார்.
இவரது சகோதரிகளான மீனாட்சி, 49; வசந்தி, 54, ஆகியோரின் குடும்பத்தாருக்கு இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. விஜய சுபாஷினி கடந்த 21ம் தேதி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், விஜய சுபாஷினி அவரது சகோதரருக்கு மொபைல் போனில் தன்னை தற்கொலைக்கு துாண்டியதாக தெரிவித்து ஆடியோ ஒன்றை அனுப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து ஒதியஞ்சாலை போலீசார் விஜய சுபாஷினின் சகோதரிகளான மீனாட்சி, அவரது கணவர் பிரசாந்த், மற்றொரு சகோதரி வசந்தி, அவரது கணவர் விஜயன் 58, மற்றும் உறவினரான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீரமுனிராஜ், 70, உள்பட மேலும் சிலர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
இந்த வழக்கில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வசந்தி, விஜயன் மற்றும் வீரமுனிராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட் டு சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது