ஆட்டோவில் இருந்து விழுந்தவர் சாவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரை, 62; இவர், தனது மனைவி செல்வியுடன் கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க ஆட்டோவில் வந்தார்.

நீலமங்கலம் கூட்ரோடு அருகே வேகத்தடையில் ஆட்டோ ஏறி, இறங்கிய போது சக்கரை தவறி கீழே விழுந்தார்.

இதில், தலையில் காயமடைந்த சக்கரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

Advertisement