அரசு வருவாயை அதிகரிக்க ஆலோசனை குழு: தமிழக அரசு நியமனம்
சென்னை: தமிழக அரசின் வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க, பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில், ஆறு பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக அரசு, 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், சொந்த வரி வருவாய், சுரங்கங்கள் மற்றும் கனிமங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட, முக்கிய வரி வருவாய்களில் ஏற்பட்ட சரிவு தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வருவாய் பற்றாக்குறையை சரி செய்து, மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க, ஆலோசனை வழங்குவதற்காக, பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு துணை தலைவரும், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில், வருவாய் அதிகரிப்பு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
டில்லி தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்ற பொருளாதார துறைத் தலைவர் கிருஷ்ணன், சர்வதேச நிதியத்தின் நிதி விவகாரத் துறை பொருளாதார நிபுணர் அரவிந்த் மோடி, மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய முன்னாள் தலைவர் நஜிப் ஷா, தமிழக அரசின் நிதித்துறை செயலர் சித்திக், சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவன உறுப்பினர் சுரேஷ் பாபு ஆகியோர், குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழு, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரியில்லாத வருவாயை அதிகரிக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
வருவாய் வசூல் செய்யும் துறைகளில் முறைகேடு, வரி ஏய்ப்பு, நிர்வாக குறைபாடு ஆகியவற்றை தடுப்பதற்கும், வருவாய் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும். இக்குழு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தாலி காங்கிரஸ் கைக்கு TVK போகிறது. எதிர்காலத்தில் ஜோசப் காங்கிரஸ் தலைவர் ஆகி பிரதமர் பதவிக்கு போட்டி போட்டாலும் ஆச்சிரியமில்லை, மிஸ்ஸியனேரி டீப் ஸ்டேட் ஆட்கள் சப்போர்ட் மூலம்.
நாட்டின் வருமானத்தைப் பெருக்க எளிதான வழி பெட்ரோலிய பொருட்களின் விலைகளை ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்த வேண்டும். இதனால் , அரசுக்கு மிக அதிகமான வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 10 லிட்டர் பெட்ரோல் உபயோகித்தாலும் , அதனால் , அதிகமாக 200 ரூபாய்தான் செலவாகும். ஆனால் , அரசாங்கத்திற்கு , மிக அதிக வருவாய் கிடைக்கும். மகளிர் உரிமைத்தொகையாக ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளதால் , பெட்ரோல் விலை உயர்வால் ஏற்படும் அதிக செலவு , ஒவ்வொரு குடும்பத்தாலும் எளிதாக ஈடு கட்ட முடியும். 200 யூனிட்டுக்கு மேல் செலவாகும் மின்சாரத்திற்கு அதிக நுகர்வு கட்டணம் வசூலிக்கலாம். மாதம் 50000க்கு மேல் சம்பாத்தியம் உள்ளவர்களிடம் 20% வரி வசூலிக்கலாம். காதர் தவிர மற்ற ரெடிமேடு துணிகளுக்கு 20% அதிக வரி வசூலிக்கலாம். ஹோட்டல் உணவுகளுக்கு 20% வரி விதிக்கலாம். பஸ் கட்டணம் குறைந்தபட்சம் 2 மடங்கு உயர்த்தலாம். 55 வயது retirement ஆக நிர்ணயித்து , retire ஆகுபவர்கள்ளுக்கு fixed அமௌன்ட் பென்ஷன் ஆக தந்து , மீதம் உள்ள சம்பளத்தில் fixed salary ல் புது வேலை வாய்ப்பு உருவாக்கலாம். Train கட்டணத்திற்கு மாநில அரசு surge tax விதிக்கலாம். டெலிபோன் / மொபைல் கட்டணம் உயர்த்தலாம்.
தயவுசெய்து, அரசியல்வாதிகளிடம் / கட்சிக்காரர்களிடம் / அனுதாபிகளிடம் / அரசு சம்பளம் பெறுவோரிடம் ஆலோசனை கேட்காதீர்கள். அனுபவம் மிக்க, நேர்மையான, திறமையான, உண்மையான நிர்வாக நிபுணர்களிடம் மட்டுமே ஆலோசனை கேளுங்கள். திரு. மன்மோகன் செய்ததை போல, கீழ்க்கண்டவை தான் சரிப்பட்டு வரும். முடிவெடுக்கும் அதிகாரிகளை / அதிகாரங்கள் தவிர, மற்றவர்களை தனியார் மூலம் தொகுப்பூதியத்தில் பணிக்கு அமர்த்துங்கள். தேவையற்ற / காலத்திற்கு ஒவ்வாத, நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடி, செட்டில்மென்ட் கொடுத்து அனுப்புங்கள். மாநிலத்தில் இயங்கும் பெரும்பாலான புறநகர் பேருந்துகளை, தனியாருக்கு கொடுத்துவிடுங்கள். டவுன் பஸ்களை கூட, பாதியை தனியாருக்கு கொடுத்துவிடலாம். அரசின்வசம் சில பேருந்துகள், கட்டண கட்டுப்பாடு, நேர கட்டுப்பாடு மற்றும் வழித்தட உரிமை தருதல் மட்டும் வைத்துக்கொள்ளலாம். மின்சார அளவீடுக்கு, ஸ்மார்ட் மீட்டரை பொருத்துங்கள். பெரும்பாலான மின்சார அலுவலகத்தின் செயல்பாடுகளை, தனியாரில் சிறந்த நிறுவனங்களிடம் ஒப்படையுங்கள். இவற்றை முதலில் முக்கியமாக செய்துவிட்டு, அடுத்தகட்டத்தில், மீதியை யோசிக்கலாம்.
வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை 24 தொறந்து மணிநேரமும் சேவை, சரக்கு சப்ளை கொடுங்க, கடன்ல கொடுங்க... அரசு வருமானம் 500% உயரும். மது பிரியர்களை கொஞ்ச கொஞ்சமா கண்ணம்மா பேட்டைக்கு அரசு செலவுலே அனுப்பிவைங்க. அவுங்க வீட்டுக்கு, நாட்டுக்கு ஒரு சுமை. குடிக்காத மக்கள் 4 கோடி மட்டும் தமிழ் நாட்டுக்கு போதும். வருமானம் உயர்த்தும் குழு எல்லாம் தேவை இல்லாத துருப்பிடித்த ஆணிகள்.
விவரம் தெரிஞ்ச ஒரு விடியல் ஆளை குழுவில் போடுங்க. 40 பர்சண்ட் மிச்சமாக்கும் வழி கிடைக்கும்.
40 பர்சண்ட் கமிஷனை நீக்கி நல்லாட்சி குடுங்க. வருமானம் தானே உயரும்.
50 சதவீதம் அரசு வருமானம் அதிகாரிகளுக்கு போகிறது.
முதலமைச்சர் பின்னால் 30 கார் போவதை. நிறுத்தி விட்டு 5 கார்கள் போதும். இதனால் பெட்ரோல் செலவு மிச்சம் ஆகும்.
இனி முதலமைச்சர் வந்தால் கும்பிட்டால் போதும். 2000 ரூபாயில் மாலை வாங்கி போட அவசியம் இல்லை.
அது போல சிறு சிறு செலவுகளை கட்டு படுத்தினால் சுமார் 1000 கோடி வருடத்திற்கு மிச்ச படுத்தலாம்.
அந்த படத்தில் காமெடியனாக ஸ்டாலினை போடலாம் வாய் தொறந்தாலே ரசிகர்கள் சிரிக்கலாம்
இந்த நாட்டில் லஞ்ச ஊழல் மிக்க அதிகார வர்கம் பதவிகளில் இருக்கும் வரை அரசு வருவாயை அதிகரிக்க முடியாது. மாறாக அரசு வருவாய் குறைக்கும் அவர்களுக்கெல்லாம் சம்பளம் ஓய்வூதியம் அளிப்பதால் செலவு அதிகரிக்கவே செய்யும்.
ஏற்கனவே முந்தைய அரசில் முன்னாள் RBI கவர்னர்,மற்றும் உலக பொருளாதார் நோபெல் பரிசு பெற்ற மேதைகள் ஆகியோரை கொண்ட குழுவை அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதி நிலையை உயர்த்த அமைத்தார். அந்த குழு என்ன என்ன
பரிசீலனைகள் கொடுத்தன, அதில் எவை அமல் படுத்தப் பட்டது அதனால் நிதி நிலைமை எந்த அளவிற்கு சீரடைந்தது, அந்த குழுவிற்கு ஆன செலவு ஆகியவற்றை வெளி இட வேண்டும்.
கண்ணுக்கு தெரிந்து மாநிலத்தின்.கடன் சுமை 13 கோடி ஆனது தான் தெரியும். இந்த குழுவிற்கு என்ன mandate ?