அரசு கலை கல்லுாரியில் செபி பயிற்சி பட்டறை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், செபி குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நேற்று நடைபெற்றது.


அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை சார்பாக, செபி குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. வணிகவியல் துறை விரிவுரையாளர் முனைவர். அருண்குமார் வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.செந்தில்குமார் வாழ்த்தி பேசினார்.செபியின் முதலீட்டு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் மோகன்குமார், செந்தில்குமார் ஆகியோர் முதலீடுகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் குறித்து பேசினர். பேராசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இரண்டாமாண்டு வணிகவியல் மாணவி சகானா நன்றி கூறினார்.

Advertisement