கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அத்தனுாரை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் வெங்கடேஷ், 25; கட்டட வேலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.

மேட்டு மிஷின் பகுதியில் லட்சுமணன் என்பவரது வீட்டில் கட்டுமான பணிக்காக மாடியில் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த வெங்கடேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெண்ணந்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement