கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் முறைகேடு; செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்
கோவை: கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆர்.டி.ஐ ஆவணங்கள் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று, மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 2,271 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோவை தெற்கு தொகுதியில் அதிகளவு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. கரூரில் இருந்து 13 சுயேச்சைகள் கோவை தெற்கில் போட்டியிட்டனர். தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய், டோக்கன் விநியோகம் செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.
கோவை தெற்கில் ஓட்டுக்கு பணம் கொடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் மனு அளித்திருந்தார். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஈஸ்வரன் தேர்தல் கோப்புகளை ஆய்வு செய்தார். பிறகு அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:
கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக 48 புகார்கள் கொடுக்கப்பட்டது. இரண்டு புகார்களில் மட்டும் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. ஒரு புகாருக்கு சி.எஸ்.ஆர் கொடுக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நடந்த இரு சம்பவங்களில் ஒரு லட்சத்து 86,000 ரூபாய், 42,500 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்குகளில் தலா ஒருவரை கைது செய்துள்ளனர்.
வெரைட்டி ஹாலில் அளிக்கப்பட்ட புகாரில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தியதாக கூறியுள்ளனர். இந்த 7 பேருமே கரூரை சேர்ந்தவர்கள். இதன் மூலம் வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கி பணப்பட்டுவாடா செய்தது உறுதியாகிறது.
டோக்கன் விநியோகம் தொடர்பாக 9 வழக்குகளை (தி.மு.க. 8, அ.தி.மு.க. 1) பதிவு செய்து சி.எஸ்.ஆர் கொடுத்துள்ளனர். இந்த அனைத்து புகார்களுமே ஏப்ரல் 19, 20, 21 ஆகிய கடைசி 3 தேதிகளில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தான் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
மற்ற புகார்களில் இதை முறையாக விசாரிக்கவில்லை. இதிலிருந்தே தேர்தலில் முறைகேடு நடந்தது உறுதியாகிறது. பணப்பட்டுவாடா செய்யவில்லை என தேர்தல் அதிகாரிகள் புகாரை முடித்து வைத்தது தவறு. தேர்தல் ஆணையம் விசாரணை கமிஷன் அமைத்து முறையாக விசாரித்து செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டுக்கு 5000₹கொடுத்தது உண்மை கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு
வந்தாரை வாழவைக்கும் தமிழ் மக்களை முட்டாள்களாகவும், சுயநலவாதிகளாகவும், குடிகாரர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், இலவசங்களை எதிர்பார்க்கும் சோம்பேறிகளாகவும், பேராசைக்காரர்களாகவும், பொறாமைபிடித்தவர்களாகவும், ஊழல்வாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் மாற்றி கல்வியை வியாபாரமாக்கி மக்களின் அறிவை மழுங்கடித்துவிட்டு, தொலைநோக்குப்பார்வையுடன் எந்தவிதமான அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்காமல் வெறும் கட்டிடங்களை மட்டுமே கட்டினால் வளர்ச்சி என தமிழக மக்களை நம்பவைத்து 100கும் 200கும் ஓடும் ஆட்டுமந்தைகளாக்கி பட்டியில் அடைத்த திராவிட ஆட்சிக்கும், திராவிட கட்சிகளுக்கும், திராவிட சித்தாந்தகளுக்கும் முழுமையாக முடிவுரை எழுதுவது மட்டுமே எதிர்காலத்தில் தமிழையும், தமிழரையும், தமிழ் மண்ணையும் காப்பாற்ற இருக்கும் ஒரே சிறந்தவழி.
கொள்ளையர்களை காப்பாற்றும் நீதி மன்றங்கள் ஒழிந்தால் நாடு வளம்பெறும்
டாஸ்மாக் வழக்கிலேயே இன்றுவரை அந்த திருடனுக்கு தண்டனை கிடைக்கவில்லை. இந்த வழக்கில் மட்டும் என்ன நீதிமன்றம் உடனே அந்த திருடனை தண்டித்துவிடுமா...? இல்லவே இல்லை. ஏன்? அவர் ஒரு அரசியல்வாதி. அதுவும் ஊழலுக்கு பேர்போன திமு கழகத்தை சேர்ந்தவர். அவர் ஒரு சாதாரண குப்புசாமியோ, முனுசாமியோ இல்லை, நீதிமன்றம் உடனே தண்டிக்க. நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மிகவும் வேதனை அளிக்கிறது. வெட்கம். வேதனை.
அதுக்குள்ளயும் அஞ்சு வருஷமும் முடிஞ்சு போயிடும்.... இவங்க நடவடிக்கை எடுத்து வாழ்ந்தாங்க...
கோவை தெற்கு தொகுதிக்கு மறு தேர்தல் தான் சரியான தீர்வாக இருக்கும்.
வேகமாக செயல்படும் முழுங்காத துறைகளே இல்லை. எங்கும் எதிலும் சுருட்டு இதான்டா விடியல் ஆட்சி, திமுகவின் சர்வ லட்சணங்கள் பொருந்தியவர். திமுகவின் தலமை பதவிக்கு மிக பொருத்தமான வர்.
வேற வேலை இல்லையா?
ஒரு சிக்கலும் வராது .........
இவரை பார்த்தாலே பிஜேபி மோடி கொண்டு அலறல் , விஜய் சொல்ல தேவை இல்லை , 31 பேர் அரசு வேலை cancelled அந்த வெறி tasamac என்று raid அவ்வளவு பயம் இவர் மீது ,
அப்பாவு வழக்கு தேர்தல் முறைகேடு 11 வருஷம் அப்போ இந்த வழக்கு கடவுளுக்கு வெளிச்சம்
இவரை பார்த்தாலே பிஜேபி மோடிக்கு அலறல். இது எப்போ தம்பி , அப்போ கைது பண்ணும் பொது ட்ரொவுசர்ல உச்சா போனது யாரு தம்பி , இந்த வீண் சவடாலுக்கு திமுககாரண அடிச்சிக்க முடியாது.மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்