1,000 அரசு பஸ்களில் பார்சல் வசதி: நஷ்டத்தை போக்க புதிய முடிவு
சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், முதல் கட்டமாக, 1,000 விரைவு பஸ்களில், 'பார்சல்' அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், தினமும், 21,515 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 43,865 கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வருவாயை பெருக்க, அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, பார்சல்கள் ஏற்றிச் செல்லும் வசதியுடன் புதிய பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற பஸ்சை, போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார்.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கட்டண உயர்வு இன்றி, இதர வழிகளில் வருவாயை பெருக்க, புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
அரசு போக்குவரத்து கழ கங்களில் உள்ள காலி இடங் களை தனியாருக்கு நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு விடுவது, சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது, பஸ் நிலையங்களில் வணிக வளா கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட உள்ளன.
உடனடியாக செயல்படுத்தும் வகையில், வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில், பார்சல் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
பயணியர் தங்களது பயணத்தின்போது, கையில் எடுத்து செல்ல முடியாத பெரிய பொருட்கள், லக்கேஜ்களை, 'பார்சல்' என புக்கிங் செய்து, அதற்கான கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம்.
இதற்காக, புதிய பஸ்களின் பின்பகுதியில், பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். நியாயமான முறையில் கட்டணம் இருக்கும்.
முதல் கட்டமாக, சென்னை உட்பட முக்கிய நகரங்களை இணைக்கும், 1,000 அரசு விரைவு பஸ்களில், இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உ ள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (20)
Venkatesan - Chennai,இந்தியா
31 ஜூலை,2026 - 13:10 Report Abuse
இது நல்ல திட்டம் தான். முறையாக செயல் படுத்தினால் கண்டிப்பாக லாபம் பார்க்க முடியும். 0
0
Reply
Aarbinms - Bangalorw,இந்தியா
31 ஜூலை,2026 - 11:19 Report Abuse
தனிப்பட்ட காரணங்களுக்காக திருட்டு த்ரவிஷ கட்டு மரத்தால் பொதுமயமாக்கப்பட்ட பஸ் சேவை மறுபடியும் தனியார் மயம் ஆக்கப்படுவது ஒன்றே தீர்வு. 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
31 ஜூலை,2026 - 09:14 Report Abuse
தவறே இல்லை. தனியார் பார்சல் சர்வீஸ் நடத்துபவர்கள் போராட்டம் நடத்தலாம். தனியார் பேருந்து விடும் போது, அரசு ஏன் பார்சல் சர்வீஸ் நடத்தக் கூடாது ? தனியார் பேருந்துகளும் பார்சல் செல்கிறது.
அரசு ஏன் அதை தடை செய்யக் கூடாது ? ரயிலில் ஆகாய விமானங்களில் பயணியர்கள் கட்டணத்தை ஈடு செய்ய பார்சல் சர்வீஸ் பயன்படுகிறது.
அதனால் அரசு பேருந்துகளிலும் பார்சல் சர்வீஸ் நன்றாக நடத்தாலாம். ஆனால் நடத்துனரும் ஓட்டுனரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் பிளாப் ஆகி விடும். 0
0
Reply
M Selvaraaj Prabu - Gaborone,இந்தியா
31 ஜூலை,2026 - 09:03 Report Abuse
கேரள அரசு பஸ்களில் ஏற்கெனவே இந்த வசதி உள்ளது. அவர்களின் சொந்த கூரியர் சேவை உள்ளது. இப்போது அவர்கள் பஸ்சின் உள்ளே சிறிய டி வி வைத்து விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். 0
0
Reply
ஜெகதீசன் - ,
31 ஜூலை,2026 - 07:37 Report Abuse
லாரி உரிமையாளர்கள் ஆட்சேபிப்பாங்க. பாரம் ஏற்றுவதாக இருந்தால் புக்கிங் செய்ய ஆள், பொருட்களை வைத்திருக்க இடம், ஏற்றி இறக்கி மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் கட்டுவதற்கு ஆள் என நிறைய ஆட்கள் தேவை. 0
0
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
31 ஜூலை,2026 - 09:30Report Abuse
கூரியர் சேவை போன்று சிறிய பார்சல்களூக்கு 0
0
Reply
V Narayanan - ,இந்தியா
31 ஜூலை,2026 - 07:33 Report Abuse
அரசு பேருந்து நிறுவனங்கள் சார்பாக நல்ல தரமான உணவகங்கள் கொண்டு வரலாம் .பேருந்தில் தண்ணீர் விற்றால் போதும் .அதில் ஓய்வு பெற்ற ஊழியர்களை ,இருக்கும் ஊழியர்களின் மனைவிகளை பிள்ளைகளை வேலைக்கு வைத்து அவர்களுக்கு ஒரு வருமானம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் . 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
31 ஜூலை,2026 - 07:09 Report Abuse
உபரி வருமானத்திற்காக 1000 சாதா பஸ்களில் பார்சல் வசதி அறிமுகம் செய்யும் போது, ஒரு 100 ஏசி பஸ்களில் பார் வசதி அறிமுகம் செய்தால் என்ன என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தளபதி டிராவல் பண்ணும் போது பிளேனில் சரக்கு கொண்டு போனாரே, ரசிகர்களுக்கும் அந்த பாக்கியம் தரலாம் இல்லையா? 0
0
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
31 ஜூலை,2026 - 09:05Report Abuse
உங்க குடும்ப உறுப்பினர்கள் அந்த பார்களை நடத்தலாம். 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
31 ஜூலை,2026 - 10:57Report Abuse
குத்தாட்டம் போட வைத்து பணம் சம்பாதிக்கலாம். 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
31 ஜூலை,2026 - 12:08Report Abuse
உண்மையின் உலக்கை சங்கிப்பு… களின் அசிங்கங்கள் லட்டு மாதிரி இனிக்குதா? 0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
31 ஜூலை,2026 - 06:37 Report Abuse
இது எங்களுக்கு கூடுதல் பணிச்சுமை என டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இதை செய்யமாட்டார்கள், புதிய ஆட்களை நியமித்தால் கூடுதல் செலவே தவிர லாபம் தராது.. 0
0
Reply
Ramona - london,இந்தியா
31 ஜூலை,2026 - 05:50 Report Abuse
இந்த திட்டத்தில் ,கருப்பு பணத்தை எளிதாக அனுப்ப முடியும் ,ஹவாலா காரங்களுக்கு இனி ஹல்வா தான். ஏற்கனவே இந்த திட்டம் சைலண்ட் ஆக நடந்து வருகிறது ,இனி பார்சல் என்ற போர்வையில் பல கோடிகள் ,வங்கி கணக்கில் வராமல் பத்திரமாக அனுப்பலாம். 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
31 ஜூலை,2026 - 07:00Report Abuse
நீரே சொல்றீர் ஏற்கனவே சைலண்டாக நடந்து கொண்டு இருக்கிறது என்று. அதை அரசு வருமானம் ஆக்க பார்க்கிறது. 0
0
Reply
ManiK - ,
31 ஜூலை,2026 - 05:41 Report Abuse
அது ஏன் எல்லா பஸ்களிலும் ஒரே டிரைவர் தான் இருக்காரு? 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
சொட்டு நீர் பாசன திட்டத்திற்குவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
-
ஆடித்திருவிழாக்கள் ஆடு விலை உயர்வு
-
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க அவகாசம்
-
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதில் எந்த பயனும் இல்லை: இபிஎஸ் பேட்டி
-
காவிர் நீர் பிரச்னை தொடர்பான கேள்வி பதில் கூறாமல் சென்ற அமைச்சர் ஆனந்த்
-
pls follow last week layout கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்
Advertisement
Advertisement