ஆடித்திருவிழாக்கள் ஆடு விலை உயர்வு
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் கிராமக் கோயில்களில் ஆடி திருவிழாக்கள் விமரிசையாக நடந்து வரும் நிலையில் கிடா விருந்து வைப்பதால் ஆடுகள் விலை உயர்ந்தது. திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள கோயில்களில் ஆடி திருவிழாக்கள் களைகட்டி வருகிறது. விழாக்களை முன்னிட்டு வீடுகளில் கிடா விருந்து நடக்கிறது. இதனால் இறைச்சிக்கான ஆடுகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக தேவைப்படுகிறது. திருவாடானையில் வாரந்தோறும் திங்களன்று ஆட்டு சந்தை நடைபெறும். இங்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து ஆடு வியாபாரிகள் கூடுவார்கள்.
ஆடுகளின் தேவை அதிகரிப்பால் அவற்றின் எடை மற்றும் தரத்திற்கு தகுந்தாவாறு ரூ.500 முதல் 700 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆடுகள் வாங்க வந்த மக்கள் விலை உயர்வால் சிரமமடைந்தனர். திருவிழாக்கள் முடியும் வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
––
மேலும்
-
45 கிலோ குட்கா பறிமுதல்
-
நதிகளுக்கு நன்றி சொல்லும் ஆடி பெருக்கு
-
தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் குப்பை மேடு துாய்மையை அலட்சியப்படுத்தியதால் அதிருப்தி
-
புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்திய இருவர் கைது
-
புதுப்பிப்பு நகர்ப்புற நில ஆவணங்கள் டிஜிட்டல் வரைபடங்களாக... மத்திய அரசின் ‘நக் ஷா’ திட்டத்தில் களப்பணிகள் தீவிரம்
-
வாகன தணிக்கை வீடியோ எடுத்த டிரைவர் கைது