'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி

அரவக்குறிச்சி:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில், 'வீ த லீடர்ஸ்' அமைப்பு, ரோட்டரி சங்கம் மற்றும் ஷேத்ரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து, 'போதை இல்லா தமிழகம்' விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இப்பேரணியை, அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் வீரமலை மற்றும் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பேரணியில், போதைக்கு எதிரான பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் நடைபயணமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் முன் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் முன் நிறைவடைந்தது.

Advertisement