வாகன தணிக்கை வீடியோ எடுத்த டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி, ஆக. 1–

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. நேற்று, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி, சோதனைச்சாவடியை கடந்த போது, அதன் டிரைவரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷம்பால், 26, என்பவர், வாகன தணிக்கையை வீடியோ எடுத்து, முகநுாலில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். அதை, பணியில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் ஷம்பால், அங்கிருந்து நாற்காலிகளை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து துறையினர் அளித்த புகாரின்படி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, டிரைவர் ஷம்பாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement