45 கிலோ குட்கா பறிமுதல்

அன்னூர்: அன்னூரில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 45 கிலோ குட்கா பிடிபட்டது.

அன்னூர் வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை குறித்து போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று அருகம்பாளையத்தில், ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அழகேசன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 45 கிலோ குட்கா பொருட்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை பிடிபட்டன.

போலீசார் வழக்கு பதிவு செய்து குட்கா பதுக்கி வைத்திருந்த கருமத்தம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ், 41 என்பவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement